May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

பிளஸ்-2 துணைத்தேர்வு: அடுத்த மாதம் 24-ந்தேதி தொடங்குகிறது

1 min read

Plus-2 bye-exam: Starts on 24th of next month

8.4.2024
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த திங்கட்கிழமை வெளியானது. இந்த தேர்வை 11 ஆயிரத்து 594 பேர் எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 41 ஆயிரத்து 410 பேர் தோல்வியை தழுவி இருந்தனர்.

இந்த நிலையில் தேர்வை எழுதாத, தோல்வியை தழுவிய மாணவ-மாணவிகளுக்கு அடுத்தகட்ட வாய்ப்பாக துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 24-ந்தேதி முதல் வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்த துணைத்தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரையிலான நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதேபோல் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைத்துள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.