May 13, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எஸ்.பி.சுரேஷ்குமார் நடவடிக்கை

1 min read

7 people arrested in Tenkasi district under gangster act- S.P. Sureshkumar action

30.5.2024
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 7 பேர்களை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சங்கரன்கோவில் சுடலையாண்டி என்பவரின் மகன் சுரேஷ்(வயது 27), மற்றும் வல்லம் பகுதியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிகளான பெருங்கோட்டூர் பிச்சையா என்பவரின் மகன் மாரிச்சாமி (வயது 38), வல்லம் சந்தனகுமார் என்பவரின் மகன் இசக்கி முத்துப்பாண்டி (வயது 20), கண்ணன் என்பவரின் மகன் பிரவீன் குமார்(வயது 23), இசக்கித்துரை என்பவரின் மகன் சுபாஷ் (வயது 26), கண்ணன் என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 24) மற்றும் பிச்சையா என்பவரின் மகன் சந்தனகுமார் (வயது 45) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.