கள்ளச்சாராய இழப்பீட்டை காரணம் காட்டி பணியாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவு
1 min read
The judge ordered Rs 10 lakh to be paid to the employee’s family citing embezzlement
10.7.2024
மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்த தனது மகனுக்கு இழப்பீடு வழங்க கோரி தந்தை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக கலையரசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் கடந்தாண்டு உயிரிழந்தார்.
கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், “சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, அப்பாவி மனுதாரருக்கு மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது” என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.