June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு காஷ்மீரில் ஈபிள் டவரைவிட உயரமான செனாப் மேம்பாலம்-பிரதமர் திறந்து வைக்கிறார்

1 min read

Chenab flyover in Jammu and Kashmir, taller than Eiffel Tower – PM inaugurates

25.12.2024
ஜம்மு காஷ்மீருக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையான ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதை திட்டம் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஒருசில இடங்களில் மட்டும் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிக்கப்பட வேண்டியுள்ளன. அந்தப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து ரெயில் போக்குவரத்தை ஜனவரி 26-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இமயமலையில் சவால் நிறைந்த பகுதியில் நடைபெற்று வரும் இந்த ரெயில் பாதையில் 38 இடங்களில் 119 கி.மீ. நீளத்துக்கு மலைகளை குடைந்து சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், ஒரு சுரங்கப்பாதை மட்டும் 12.75 கி.மீ. நீளம் கொண்டது. பள்ளத்தாக்குகள் வரும் பகுதியில் 37 இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், 26 பாலங்கள் பெரியது.

ஒவ்வொரு இடங்களுக்கு இடையே பாதைப் பணிகள் முடிய.. முடிய.. 2005-ம் ஆண்டு முதல் ரெயில்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில், ரியாசி-சங்கல்தான் இடையே இமயமலையின் இரு பகுதிகளுக்கு இடையே செனாப் ஆற்றுக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட வளைவு பாலத்தை உள்ளடக்கிய வழித்தடத்தில் விரைவில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
ரூ.1,486 கோடி மதிப்பில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் என்ற சாதனையை படைத்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலும், செனாப் ஆற்று மட்டத்தில் இருந்து 359 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. அதாவது, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் கூடுதல் உயரம்.
ரூ.1,486 கோடி மதிப்பில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் என்ற சாதனையை படைத்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலும், செனாப் ஆற்று மட்டத்தில் இருந்து 359 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. அதாவது, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் கூடுதல் உயரம்.
இந்த ரெயில் வழித்தடம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்ததும், ஜம்மு முதல் பாரமுல்லா வரை 435 கிமீ தூரத்திற்கு ரெயில் போக்குவரத்து இருக்கும். சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் செனாப் வளைவு பாலம் வழியாக ரெயிலில் பயணம் செய்வது, பயணிகளுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை வழங்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *