June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை-கல்லூரிக்கு போகச் சொன்னதால் தந்தையைக் கொன்ற மகன்

1 min read

Son kills father for asking him to go to college

25.6.2025
நெல்லை அருகே கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததை தட்டிக்கேட்டதால் தந்தையின் தலையில் கல்லை போட்டு அவரது மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படித்தால்தான் முன்னேற முடியும் என தந்தை மாரியப்பன் அறிவுரை கூறியதால் ஆத்திரம் அடைந்த தங்கப்பாண்டி (19) இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தந்தை மாரியப்பனின் உடலை கைப்பற்றிய போலீசார், தங்கப்பாண்டியை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *