July 16, 2025

Seithi Saral

Tamil News Channel

டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது

1 min read

Prime Minister Modi receives highest award in Trinidad and Tobago

5.7.2025
பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கானா நாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு கரீபியன் தீவு நாடான டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். அவர் அந்நாட்டு பிரதமர் கமலா பிரிசத் பிஸ்சரை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருதான தி ஆர்டர் ஆப் தி டிரினிடாட் அண்டு டொபாகோ குடியரசு விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை 140 கோடி இந்தியர்கள் சார்பாக ஏற்றுக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *