சீமான், விஜயலட்சுமிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
1 min read
Supreme Court warns Seeman, Vijayalakshmi
24.9.2025
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சீமான் மன்னிப்பு கூறி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த மன்னிப்பு தோரணை சரியானதாக இல்லை” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
இதனையடுத்து இருதரப்பும் மன்னிப்பு கோரி பிராமண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இருதரப்பும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொளியோ வெளியிடக்கூடாது, குறிப்பாக இந்த வழக்கு குறித்து இருவரும் எந்த ஊடகங்களில் பேச கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” உச்சநீதிமன்றம் எச்சரித்தது.