தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது
1 min read
A new low pressure area will form in the southeast Bay of Bengal tomorrow
23.10.2025
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் எனக் கருதப்பட்ட நிலையில் நிலப்பரப்புக்கு அருகே வரும்போது அது வலுவிழந்து விட்டது.
இதன் காரணமாக வானிலை அமைப்புகள் மாறிவிட்ட காரணத்தால் பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து விட்டது.
இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில் புதிய தாழ்வு பகுதி உருவாகிறது.