கடையம் திருவள்ளுவர் கழக ஜனவரி மாத கூட்டம்
1 min read
January meeting of the Kadayam Thiruvalluvar Kazhagam
24.1.2026
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் ஜனவரி மாதத்திற்கான மாதாந்திர சிறப்பு கூட்டம் இன்று(சனிக்கிழமை ) கடையம் வடக்கு தேர் தெருவி்ல் உள்ள கே.எஸ்.எஸ்.சிற்றரங்கில் நடந்தது. திருவள்ளுவர் கழகத் தலைவர் தமிழ்த்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் “இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற தலைப்பில் நெல்லை குரலோன் சிறப்புரை ஆற்றினார்.
ஆசிரியர் வேலு வரவேற்றார். கிருஷ்ண பொன் ஜோதி குறள்சிந்தனை சொன்னார். சோமு நம்பி நன்றி கூறினார்.
திருவள்ளவர் கழக செயலாளர் கல்யாணிசிவகாமி நாதன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் குமாரசாமி என்ற ரவி விருந்து வழங்கினார்.