அசாமில் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை-மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min read
Underwater road-rail tunnel in Assam – Union Cabinet approves
15.2.2026
இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது உலகின் 2வது சாலை-ரயில் சுரங்கப்பாதையாக இருக்கும். முதலாமது ஐரோப்பாவில் அமைந்துள்ளது.
இரட்டை வழிகள் கொண்ட இந்த பாதையின் ஒரு பகுதி ரெயில் பாதையாகவும், மற்றொரு பகுதி வாகனங்கள் செல்லும் சாலையாகவும் இருக்கும்.
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15.79 கி.மீ தூரத்திற்கு ரூ.18,662 கோடி செலவில் இந்த சாலை-ரயில் சுரங்கப்பாதை கட்டப்பட உள்ளது.
இது அசாமில் உள்ள கோப்பூர் மற்றும் நுமாலிகரை இணைக்கும். பயண நேரத்தை சுமார் 6 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைக்கும்.
முன்னதாக நேற்று அசாம் சென்ற பிரதமர் மோடி, அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்கும் சாலையும், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறு வழிச் சாலைப் பாலத்தையும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.