உலக தாய்மொழி நாள்: நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு
1 min read
International Mother Language Day: Pledge taken at Nellai SP office
20.2.2026
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இன்று எஸ்.பி. பிரசண்ணகுமார் முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அப்போது அவர்கள் அனைவரும், “எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
=
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகள் பலமாக நிலைத்திருக்கும்: கனிமொழி எம்.பி. பேட்டி
தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத் திட்டங்கள் எதுவுமில்லை எனக் கூறி பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது:
“பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இடம்பெறுவதில்லை. ஆனால், இந்த பட்ஜெட்டை அவர் முழுமையாகப் படித்துப் பார்த்தால் இளைஞர்களுக்கும், விளையாட்டுத் துறைக்கும் தேவையான பல முக்கியமான எதிர்காலத் திட்டங்கள் இருப்பதை அறியலாம். எதற்காவது ஒரு காரணத்திற்காக வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர் நடத்தும் அரசியல் நாடகம் சரியானது அல்ல” என்று கூறினார்.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க. கூறி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, “பா.ஜ.க. தனது கூட்டணியைச் சரியாக வைத்துக் கொண்டாலே போதும்; அவர்கள் ஏன் மற்ற கூட்டணிகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை” என்று கூறினார்.
மாநில சுயாட்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., “மாநில உரிமைகளை டெல்லியில் கொண்டு போய் அடகு வைத்தவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்பதே தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கை. இது ஒருவேளை அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.