June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

போர் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு ரூ. 18.87 லட்சம் கோடி செலவாகும்

1 min read

If the war continues, it will cost the US 1.5 million lives.

4.3.2026
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.

பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

போரின் முதல் நாளில் அமெரிக்கா சுமார் 779 மில்லியன் டாலர் (ரூ. 6,900 கோடி) செலவிட்டுள்ளது.
இந்தப் போர் தொடர்ந்தால், அமெரிக்காவிற்கு மொத்தம் 210 பில்லியன் டாலர்கள் (ரூ. 18.87 லட்சம் கோடி) செலவாகும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இது தவிர, இஸ்ரேலுக்கு வழங்கப்படும் நிதி உதவியையும் கருத்தில் கொண்டால், இந்த செலவு மேலும் அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் பல, ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா தனது மிகவும் விலையுயர்ந்த ஆயுதங்களை இந்த போரில் பயன்படுத்துகிறது.
USS Gerald R. Ford உட்பட உலகின் மிகப்பெரிய இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா இந்த போரில் பயன்படுத்துகிறது.
இந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றும் இயக்க ஒரு நாளைக்கு ரூ. 58 கோடி செலவாகும்.
மேலும், வீரர்களைக் குவிப்பதற்கும் அவர்களின் தேவைகளுக்கும் இதுவரை சுமார் ரூ. 5,500 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
மறுபுறம், இந்தப் போரில் பின்வாங்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
“ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படை முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது. இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர விரும்புகிறார்கள், ஆனால் காலம் கடந்துவிட்டது. போர் எவ்வளவு காலம் நீடித்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சண்டை பல மாதங்களாக தொடர்ந்தால், அது அமெரிக்க பொருளாதாரத்தில் மட்டுமல்ல, உலகளவில் எண்ணெய் விலைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *