திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.22 கோடி
1 min read
One-day banknote offering at Tirupati temple worth Rs. 4.22 crore
17.3.2026
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 82 ஆயிரத்து 57 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 30 ஆயிரத்து 990 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.4 கோடியே 22 லட்சம் ஆகும்.