June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

மேற்கு வங்கத்தில் மேலும் 35 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

1 min read

35 more ministers sworn in in West Bengal

1.6.2026
கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி, பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர், என்டிஏ கூட்டணியைச் சேர்ந்த பல மாநில முதல் மந்திரிகள் மற்றும் துணை முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தீபக் பர்மன், அர்ஜுன் சிங், ஷங்கர் கோஷ், கவுரி சங்கர் கோஷ், தபஸ் ராய், மனோஜ் குமார் ஓரன், ஜகந்நாத் சட்டோபாத்யாய, அஜோய் போத்தார், ஸ்வபன் தாஸ் குப்தா, ஷரத்வாத் முகர்ஜி, கல்யாண் சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 எம்எல்ஏக்கள் மந்திரிகளாக இன்று பதவியேற்றனர்.

லோக்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுவேந்து அதிகாரி, மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில், அரசின் அமைச்சரவை உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 44 ஆக இருக்க முடியும். தற்போதைய அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு மந்திரிகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 3 பேரை மந்திரிகளாக நியமிக்கும் இடம் உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *