June 28, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதியில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்-வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

1 min read

Unprecedented crowd of devotees at Tirupati; VIP break darshan cancelled

28.6.2026
திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரலாறு காணாத அளவு பக்தர்கள் கூட்டம் குவிந்து உள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தரிசனத்திற்காக அதிக அளவு பக்தர்கள் வந்துள்ளனர். வைகுந்தம் தங்கும் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

இதனால் தரிசன வரிசையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பச்சி கல்வ கங்கம்மா கோவில் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் கட்டம், கட்டமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், டீ, பால் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் உடல்நிலை பாதிக்கபட்டால் சிகிச்சை அளிப்பதற்காக ஆங்காங்கே நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சாதாரண பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்காக இன்றும் நாளையும் வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் பரிந்துரை கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைனில் வழங்கப்படும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு வந்த 800 டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வரும் 200 ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதியில் சனிக்கிழமை 85,582 பேர் தரிசனம் செய்தனர். 44, 155 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி னர். ரூ.3.76 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.4.66 லட்சம் லட்டுக்கள் விற்பனை யானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *