மாஸ்டர் படத்தால் தயாரிப்பாளர்- விநியோகஸ்தர்கள் இடையே மோதல்
1 min read26.3.2020
விஜய் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தின் டிரைலரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மாஸ்டர் படமே வெளியாகுமா என்ற சந்தேகத்திற்கு ஆளாகியுள்ளது. மேலும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் இடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். மேலும் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மாஸ்டர் படத்தின் வியாபாரங்கள் ஜனவரி மாதத்திலேயே முடிவடைந்தது. தமிழ்நாடு தியேட்டர் ரைட்ஸ் மட்டும் சுமார் 80 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மாஸ்டர் படத்தின் மீதான நம்பிக்கை குறைந்து விட்டதாக விநியோகஸ்தர்கள் படத்தை வெளியிட மறுப்பது படக்குழுவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் சேவியர் பிரிட்டோ படத்தின் தயாரிப்பை ஆரம்பித்திருந்தாலும் சில நாட்களிலேயே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் மற்றும் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் ஆகிய இருவரும் இணை தயாரிப்பாளராக படத்தில் இணைந்தனர்.
எப்போதுமே ஒரு படம் வெளியான பிறகுதான் விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களிடம் வாங்கிய விலையை கொடுப்பார்கள். லலித் குமார் வழக்கத்திற்கு மாறாக தற்போது மாஸ்டர் படத்தின் விநியோக உரிமையை கேட்டு விநியோகஸ்தர்களுக்கு போன் செய்துள்ளார்.
இதனால் கடுப்பான விநியோகஸ்தர்கள் மாஸ்டர் படத்தை நம்பி நாங்கள் இல்லை என பணத்தை திரும்ப தர ரெடியாகி விட்டார்களாம். மாஸ்டர் படத்தின் கோயம்புத்தூர் உரிமையை வாங்கிய விநியோகஸ்தர் மாஸ்டர் படத்துக்கு கொடுத்த அட்வான்சை திருப்பி கேட்டுள்ளார்.
ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியீட்டு தேதிகளில் பல குளறுபடிகள் நடந்து வரும் நிலையில் தற்போது வினியோகஸ்தர்களும் குட்டையை குழப்புவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.