பயத்தில் பிரியா பவானி சங்கர்
1 min read26.3.2020
சின்னத்திரையிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனாலும் திறமை இருந்தால் மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள்.
அந்தவகையில் சின்னத்திரை தொகுப்பாளினி, தற்போது நடிகையாக வளர்ந்து வருபவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் பிரியா பவானி சங்கர். பின்பு கடைக்குட்டி சிங்கம் படத்தில் சென்டிமெண்ட் காட்சிகளின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.
எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து மான்ஸ்டர் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரியா பவானி சங்கர் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இடையே காதல் வந்துவிட்டதாக அரசல் புரசலாக பேசப்பட்டது. அதற்கு அவர்கள் இல்லை என்று விளக்கமும் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த மாஃபியா திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதாவது இவரது நடிப்பு படத்தில் காமெடியாக விமர்சிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் நயன்தாரா, ஆண்ட்ரியா போன்ற கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டிய இடத்தில் பிரியா பவானி சங்கரை போட்டது இயக்குனர் செய்த தவறா.? இல்லை நடிக்க வராதா என்ற அளவுக்கு யோசிக்க வைத்துவிட்டது.
மீண்டும் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து 8 படங்களில் நடித்து வருகிறார். குருதி ஆட்டம், இந்தியன் 2, பொம்மை,களத்தில் சந்திப்போம்,வான், அகம் பிரம்மாஸ்மி ஆகிய படங்கள் தற்போது வரிசை கட்டி உள்ளன.
என்னதான் படங்கள் வரிசை கட்டி நின்றாலும் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போன்ற ஒரு பயத்தை பிரியா பவானி சங்கருக்கு ஏற்படுத்தியுள்ளது.