April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர நிகழ்ச்சிகள் ரத்து

1 min read
Seithi Saral featured Image
Cancellation of Panguni Uttara programs

29.3.2020

திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர நிகழ்ச்சிகள் கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து  செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் அம்ரித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்.6ம் தேதி நடக்கவிருந்த பங்குனி உத்திர நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்படுகின்றன. இக்கோயிலைச் சார்ந்த பிற கோயில்களிலும் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. குறிப்பாக நாலுமூலைக்கிணறு குன்றுமேல் அய்யன் சாஸ்தா கோயிலில் நடைபெறவிருந்த பங்குனி உத்திரம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதே வேளையில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நித்திய பூஜைகளும் உரிய நேரங்களில் திருக்கோயில் வழக்கம்படி நடைபெறும். ஆனால், இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.