May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

கட்டணம் செலுத்தாவிட்டாலும் பி.எஸ்.என்.எல். இணைப்பு துண்டிக்கப்படாது: மத்திய மந்திரி உறுதி

1 min read

BSNL will pay for it even if it is not paid. Link will not be disconnected

31/3/2020

பி.எஸ்.என்.எல். பிரீ பெய்ட் சிம் கார்டுகளின் இணைப்பு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி வரை துண்டிக்கப்படாது என்று மத்திய தபால் தொழில்நுட்பத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார்.

பி.எஸ்.என்.எல்.

மத்திய தபால் தொழில்நுட்பத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று (திங்கட்கிழமை) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பி.எஸ்.என்.எல். தலைமை அதிகாரிகள் மற்றும் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனெரல் ஆகியோருடன் ‘காணொலி’ மூலம் ஆலோசனை நடத்தினார்.

அதற்குப் பிறகு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல். மற்றும் தபால்துறை இந்த சிக்கலான காலகட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கட்டணம் ஏதும் கட்டா விட்டாலும் பி.எஸ்.என்.எல். பிரீ பெய்டு சிம் கார்டுகளின் இணைப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி வரை துண்டிக்கப்படாது; அத்துடன் ஏழை மக்கள் மற்றும் தேவையான சூழலில் இருப்பவர்கள் இந்த தருணத்தில் இருப்பவர்கள் இப்போது கால்கள் செய்வதற்கு ஏதுவாக அவர்கள் கணக்கில் ரூ.10 சேர்க்கப்படும்.

மணி ஆர்டர்

தபால் துறையானது ஏழை மக்களுக்காக தொடர்ந்து மணி ஆர்டர்களை அனுப்பி வருகிறது. ஆதார் தொடர்புடைய தொகைகளும் சரியாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. மருந்து பொருட்கள் உள்ளிட்டவையும் தபால் துறை மூலம் தொடர்ந்து சரியாக அனுப்பபட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.