சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா; ஒரே நாளில் 203 பேர் பாதிப்பு
1 min readIncreasing Corona in Chennai; 203 people affected in a single day
-5-2020
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழக சுகாதார துறையினரால் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
இன்று தமிழகத்தில் 266 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 10,584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் இந்த முடிவு வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஆண்கள்- 2015. பெண்கள்- 1007. திருநங்கை-1
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்ற 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படடு உள்ளது.. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1460 ஆக உயர்ந்து உள்ளது.
இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இன்று 33 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 56 ஆகும்.
கடலூரில் இன்று 9 பேருக்கு பாதித்த நிலையில் அந்த மாவட்டத்தில் 39 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
கோவையில் இன்று மட்டும் 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து இந்த மாட்டதில் கொரோனா பாதிப்பு146 ஆக உயர்ந்து இருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் இன்று 6 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ள நிலையில் மொத்த பாதிப்பு 15 ஆகும்.
செங்கல்பட்டில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆகும்.
அரியலூரில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 28 ஆகும்.
திருவள்ளூரில் 2 (மொத்த பாதிப்பு 70), மதுரையில் 2 (மொத்த பாதிப்பு 90), தென்காசியில் 2 (மொத்த பாதிப்பு 40) பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
சாவு எண்ணிக்கை 30
சென்னையில் இன்று வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 38 பேர் குணம் அடைந்து உள்ளனர். இதுவரை 1379 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1611 ஆகும்.