May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியைச் சேர்ந்த பெண் போலீஸ் கண்டெய்னர் லாரி மோதி பலி

1 min read
Seithi Saral featured Image

Tenkasi female police container lorry collides

5-5-2020

சென்னையில் கண்டெய்னர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை பெண் போலீஸ் இறந்தார். இவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

பெண் போலீஸ்

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் பெண் போலீசாக பணியாற்றி வந்தவர் பவித்ரா. இவர் தன்னுடன் பணிபுரியும் மற்றொரு பெண் போலீசுடன் மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கண்டெய்னர் லாரி பாமாயில் ஏற்றிக் கொண்டு பாரிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கண்டெய்னர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

சாவு

இதில் பின்னால் அமர்ந்திருந்த பெண் போலீஸ் கீழே விழுந்து விட்டார். பவித்ரா லாரி சக்கரத்தில் சிக்கிக் கொண்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் சென்ற இன்னொரு பெண் போலீஸ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புனனாய்வுப்பிரிவு காவல்துறையினர் லாரி டிரைவர் ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த பெண் போலீஸ்பவித்ரா தென்காசி மாவட்டத்தைச்சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.