இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 194 பேர் சாவு
1 min read194 people die in India one day
28-5-2020
இந்தியாவில் ஒரே நாளில் 6566 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 194 பேர் இறந்துள்ளனர்.
194 பேர் பலி
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பற்றிய தகவலை தினமும் காலையில் மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது.
அதன்படி இன்று(வியாழக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 194 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4531 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 67692 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில்தான் கொரோனாவின் தாக்கம்அதிகமாக உள்ளது. இதை அடுத்து தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது.
மாநிலம் வாரியாக…
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலம் வாரியாக வருமாறு:-
அந்தமான் நிகோபார் தீவுகள் – 33
ஆந்திர பிரதேசம் – 3171
அருணாச்சல பிரதேசம் – 2
அசாம் – 781
பீகார் – 3061
சண்டிகர் – 279
சத்தீஸ்கர் – 369
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 2
டெல்லி – 15257
கோவா – 68
குஜராத் – 15195
அரியானா – 1381
இமாச்சல பிரதேசம் – 273
ஜம்மு – காஷ்மீர்- 1921
ஜார்க்கண்ட் – 448
கர்நாடகா – 2418
கேரளா – 1004
லடாக் – 53
மத்திய பிரதேசம் – 7261
மராட்டியம் – 56948
மணிப்பூர் – 44
மேகாலயா – 20
மீசோரம் – 1
நாகலாந்து – 4
ஒடிசா – 1593
புதுச்சேரி – 46
பஞ்சாப் – 2139
ராஜஸ்தான் – 7703
சிக்கிம் – 1
தமிழ்நாடு – 18545
தெலுங்கானா – 2098
திரிபுரா – 230
உத்தரகாண்ட் – 469
உத்தர பிரதேசம் – 6991
மேற்கு வங்காளம் – 4192