May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 194 பேர் சாவு

1 min read

194 people died for corona in India one day

29-5-2020

இந்தியாவில் ஒரே நாளில் 6,566 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது .கொரோனாவுக்கு ஒரே நாளில் 194 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பற்றிய தகவல்களை தினமும் காலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை ) காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9:மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,566 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,51,767 ல் இருந்து 1,58,333 ஆக உயர்ந்துள்ளது.


பலி

அதேபோல் இன்று காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 194 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,337 ல் இருந்து 4,531 ஆகவும் உயர்ந்து உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,426 ல் இருந்து 67,692 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 86,110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அறிவித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.