சென்னை ராயபுரத்தில் 2,324 பேருக்கு கொரோனா
1 min read
2,324 Corona in Chennai Rayapuram
29-10-2020
சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில்…
தமிழகத்தில் அதிகமான சென்னையில்தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. சென்னையிலும் ராயபுரம் மண்டலத்தில்தான் அதிக அளவில் கொரோனா தாக்கம் உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 10,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று (வியாழக்கிழமை ) ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. 6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.
ராயபுரம்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,324 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 1,646 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,393 பேருக்கும், அண்ணாநகரில் 1,089 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 1,322 பேரும், தேனாம்பேட்டையில் 1,412 பேரும், திருவொற்றியூரில் 377 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 794 பேருக்கும், பெருங்குடியில் 217 பேருக்கும், அடையாறில் 178 பேருக்கும், அம்பத்தூரில் 516 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 178 பேருக்கும், மாதவரத்தில் 280 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 219 பேருக்கும், மணலியில் 175 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.