தம்பதிகள் ஒன்று சேர வன்னிமர பூஜை
1 min readWanni mara Pooja for couple to get together 22-6-2020
ஆனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி அன்று கவுரி பூஜை செய்ய சிறப்பான நாள். ஜூன் 25-ந் தேதி வியாழக்கிழமை வரும் இந்த நாளில் வன்னி மரத்திற்கு அடியில் இந்த பூஜையை நடத்தி வன்னி இலைகளால் அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வன்னி மரத்தின் அடியில் பூஜை செய்ய இயலாதவர்கள் வன்னிமர கிளையை வெட்டி வீட்டில் வைத்தும் இந்த பூஜையை செய்யலாம். இந்த பூஜையை 25-ந் தேதி பஞ்சமி திதி தொடங்கிய காலை 9.14 மணிக்கு பிறகு செய்யலாம். அல்லது மறுநாள் 26-ந் தேதி காலை 7-22 மணிக்குள் செய்யலாம்.
இந்த நாளில் பஞ்சமி திதியின் தேவதையான நாகத்தை வணங்கலாம். அதாவது புற்று உள்ள கோவிலுக்கு சென்று வழிபடலாம்.