May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள்3 / நாடகம்/ கடையம் பாலன்

1 min read

6113-07242034 © Masterfile Royalty-Free Model Release: Yes Property Release: Yes Senior couple hugging in doorway

Amuthavin Aasaikal / drama by Kadayam Balan

இடம்- பூங்கா

பங்கேற்பவர்கள்: பவித்ரா, ஆனந்த்

…………………

பவித்ரா: (செல்போனில்) ஹலோ ஆன்ந்த்… உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறது. சீக்கிரம் வாங்க… ச்ச என்ன மனுஷன். காதலிக்காக காதலன்தான் காத்திருப்பான். இங்கே என்னடான்னா நாம காத்திருக்க வேண்டியதிருக்கு.

ஆனந்த்: (வந்தபடி) (செல்போனையும், பவித்ராவையம் உற்று நோக்கியபடி ) நீங்க… நீங்க… பவித்ராதானே.

பவித்ரா: ஆமா… நீங்க ஆனந்த்…

ஆனந்த்: எஸ் மை டியர் பவித்ரா. நீங்க வாட்ஸ்&அப்ல அனுப்பிய போட்டோவை விட அழகாக இருக்கிங்க.

பவித்ரா: நீங்களும்தான்… ஆமா நீங்க என்னை நீ&வாபோன்னே பேசலாம்.

ஆனந்த்: சரி மை டார்லிங்.

பவித்ரா: மை லைப் ஸ்டையில் புதுமையில் பழமையா இருக்குங்க.

ஆனந்த்: நீ என்ன சொல்ற எனக்கு புரியலியே

பவித்ரா: அந்த காலத்தில கல்யாணத்துக்கு அப்புறமாத்தான் கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் பார்பாங்களாம். அத மாதிரி நாம காதலிச்சதுக்கு  அப்புறம்தான் ஒருத்தரோட ஒருத்தர் படத்தை பார்த்தோம். இப்பத்தான் நேர்ல சந்திக்கிறோம்.

ஆனந்த்: நம்ம வாழ்க்கையும் அந்த காலத்து கணவன்-மனைவி மாதிரி அமையணும்.

பவித்ரா: சரி நம்ம காதல பத்தி உங்க வீட்ல சொன்னீங்களா.

ஆனந்த்: பவி.. என்னுடைய காதலுக்கு எங்க வீட்ல எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டாங்க. நான் எங்க அப்பா*அம்மாவுக்கு ஒரே பையன். நான் என்ன சொன்னாலும் கேட்பாங்க. இப்பவே நம்ம காதலை அவங்கக்கிட்ட சொன்னா நாம தனியா சந்திச்சி பேசறதுல ஒரு திரில் இருக்காது.

பவித்ரா: எங்க வீட்ல நம்ம காதல ஏத்துக்கிறது கஷ்டம்தான்.

ஆனந்த்: அப்படின்னா நம்ம காதல் கைக்கூடாதா-?

பவித்ரா: ஆனந்த் நீங்க கூடிய சீக்கிரம் ஒரு நல்ல வேலையா தேடிக்கங்க. அப்பத்தான் நம்ம காதல பத்தி வீட்ல சொல்றதுக்கு ஈசியா இருக்கும். நீங்க வேலையில இருந்தா எங்க அத்தானும் அக்காளும் சம்மதிச்சிருவாங்க.

ஆனந்த்: வேலையா-? எனக்கா? எங்க கிட்டயே நூறு பேரு வேலைபார்க்கிறாங்க.

பவித்ரா: நீங்க அவ்வளவு பெரிய பணக்காரங்களா? நான் கொடுத்து வச்சவ.

ஆனந்த்: பவி உங்க வீட்ல உனக்கு எவ்வளவு  சொத்து சேரும்?

 பவித்ரா: நாங்க சாதாரணமானவங்கத்தான். எங்களுக்கு 5 கோடிக்கு சொத்து இருக்கு. என் பங்கு இரண்டரை கோடி தேறும். உங்க சொத்துக்கு அது எம்மாத்திரம். அதனால அந்த பிச்சைக்கார சொத்தை நான் வேண்டான்னே  சொல்லிடுவேன்.

ஆனந்த்: அய்யோ பவி, உன்  சொத்து நமக்கு பெரிசு இல்லை. ஆனா அந்த சொத்து உன் பேர்ல இருந்தாத்தானே உனக்கு பெருமை.

பவித்ரா: என்னங்க நாம தனியா இருக்கிற இந்த நேரத்தில சொத்தை பற்றியா பேசறது. ஈவினிங் ஆறு மணிக்கெல்லாம் நான் ஹாஸ்டலுக்கு போகணும். அது வரைக்கும் நாம சந்தோஷமா ஜாலியா ஏதாவது பேசுவோம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.