அமுதாவின் ஆசைகள்-8/ நாடகம்/ கடையம் பாலன்
1 min readAmuthavin Aasaikal-8/ Drama by Kadayam Balan
காட்சி 8
இடம்- பூங்கா
பங்கேற்பவர்கள்- விமலா, ராஜேஷ்,
==================
விமலா: என்னங்க நாம என்னிக்கு கல்யாணம் பண்ணலாம்.
ராஜேஷ்: என்ன விமலா அதுக்குள்ளே அவசரப்படற. நாம லட்சியம் என்ன ஆவது. நாம ரெண்டு பேரும் பணக்காரனாகி இந்த ஊரே மெச்சியபடி கல்யாணம் பண்ணனும்.
விமலா: எல்லாமே பேச்சாத்தான் இருக்கு. முன்னேறதுக்கு எந்த காரியமும் நடக்கலியே.
ராஜேஷ்: இப்பத்தான் பற்ற வச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் பற்றி எரியப்போகுது. எரியற வீட்ல பறிக்க வேண்டியத பறிக்க வேண்டியதுதான்.
விமலா: என்னங்க என்னத்த பற்ற வச்சிங்க? எங்க பற்ற வைச்சிங்க? ஒண்ணுமே புரியலியே?
ராஜேஷ்: அசோக்குமார் வீட்டுக்குப்போனேன். அவன் பொண்டாட்டி அமுதாவை உசுப்பேத்தி விட்டிருக்கேன். அவங்க ரெண்டுக்கும் நேற்று ராத்திரி கடும் சண்டை.
விமலா: அவங்க சண்டைப்போட்டா நமக்கு என்ன பிரயோஜனம்?
ராஜேஷ்: அவங்கள கூடிய சீக்கிரம் பிரிச்சிடணும். அமுதாவுக்கு 5 கோடிக்கு சொத்து இருக்கு. அதை எப்படியும் ஆட்டயப்போடணும். அதே நேரத்துல நீயும் களத்தில இறங்கணும்.
விமலா: நான் என்னங்க செய்யணும்?
ராஜேஷ்: நான் அமுதா சொத்த பறிக்கக்கூடிய வேலைய பார்த்துக்கறேன். நீ அசோக் குமாரை மயக்கி அவன்கிட்ட இருந்து கறக்கக்கூடியதை கறந்துடு.
விமலா: அது எப்படி என்னால முடியும்?
ராஜேஷ்: அது உன்னால முடியும். அவ்வப்போது நீ எப்படி செயல்படணும்ன்னு நான் சொல்றேன். இன்னும் ஒரே வருஷத்திலே அசோக்குமார்&அமுதா சொத்துகள் எல்லாம் நம்ம கையில.
விமலா: சரிங்க. அதுக்கு அப்புறம்தான் நம்ம கல்யாணமா?
ராஜேஷ்: இப்ப நமக்கு என்ன குறை. கல்யாணம் ஆனவங்கங்களவிட நாம நல்லா சந்தோஷமாத்தானே இருக்கோம்.
விமலா: என்னங்க இந்த கைசூப்பி கைலாசம் இன்னும் என்னை சுத்திசுத்தி வருகிறான். அவன்கிட்ட கொஞ்சம் சொல்லி வையுங்க.
ராஜேஷ்: அவன் ஒரு லூசுப்பய. அவன் தயவு இப்ப நமக்கு தேவை. அவதான் அசோக்குமார் வீட்டல நடக்கிறத அடிக்கடி சொல்றான்.
(தொடரும்)