May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா- இதுவரை 14 பேர் பாதிப்பு

1 min read
Corona for another MLA in Tamil Nadu - 14 affected so far

19-7-2020

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 14 ஆ உயர்ந்து உ்ளளது.

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் செங்குட்டுவன்(வயது 63). இவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராகவும் இருக்கிறார்.
இவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதற்காக ஓசூரிலுள்ள, காவேரி மருத்துவமனையில் நேற்று (சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்து அனுப்பப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியானது.

14 ஆக உயர்வு

செங்குட்டுவனுக்கு ஏற்கனவே, இருதய ஆபரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அவரை டாக்டர்கள் மிகுந்த கவனமுடன் கண்காணித்து வருகிறார்கள்.
இவரோடு சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.