கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் டிஸ்சார்ஜ்
1 min read
Actress Aishwarya Rai, daughter discharged from corona
27-7-2020
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நடிகை ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ஐஸ்வர்யா ராய்
இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள். அவர்கள் இருவரும் கடந்த 11-ம் தேதி மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை அடுத்து அமிதாப் பச்சனின் குடும்பத்தில் அபிஷேக் பச்சன் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா அறிகுறி தென்பட்டது.
இதனர் அவர்கள் இருவரும் கடந்த 17-ம் தேதி மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
டிஜ்சார்ஜ்
கடந்த10 நாட்கள் அவர்கள் இருவருக்கும் ஆஸ்பத்திரியில் இருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு நடந்த பரிசோதனையில் ஐஸ்வர் ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.