May 11, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் ஜப்பான் பிரதமர் ராஜினாமா

1 min read

Japan’s PM resigns over Corona crisis

28-8-2020

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (வயது (65) சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டதால் பெரும் அவதிபட்டு வருகிறார். அவ ரின் உடல்நிலை குறித்த பல வாரங்களாக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
சமீபத்தில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

ராஜினாமா

இந்த நிலையில், ஜப்பான் அரசு தொலைக்காட்சியான என்.ஹெச்.கே ஒரு செய்தி வெளியிட்டு உள்ளத. அதில் , “தனது நோய் மோசமடைந்துள்ளதால் அபே ராஜினாமா செய்ய விரும்புகிறார். மேலும் நாட்டை வழிநடத்துவதில் இது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுகிறார்” என குறிப்பிட்டிருந்தது.
இது இப்படி இருக்க அவர் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் பதவியை ராஜினாமா செய்ததாகவும் செய்திகள் பரவுகின்றன.

ஜப்பானில் அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார். அதன் பின் நீண்டகால பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்தவர்அவர்.
கடந்த 2007ம் ஆண்டும் உடல் உபாதை காரணமாக அப்போது பிரதமர் பதவியை அபே துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

===

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.