May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

செப்டம்பர்- 2020 மாத ராசிபலன்கள்

2 min read
Rasi palan for September 2020

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு புதன் 21-ந் தேதி வரை சாதகமான பலனை தருவார்.அதன்பிறகு அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கின்றார் என்று கவலை கொள்ள வேண்டாம் காரணம் சூரியன் 17-ந் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். மேலும் குரு சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள். எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர்கள் வகையில் இருந்து வந்த இடையூறுகள் 16-ந் தேதிக்கு பிறகு விலகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.
ராகு 1-ந் தேதி 2-ம் இடமான ரிஷபத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் சிற்சில பிரச்சினையையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவுகொடுக்க நேரிடும். கேது செப்டம்பர் 1-ந் தேதி 8-ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுவது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அங்கு அவரால் விபத்து பயம், செயல்முடக்கம் முதலியன வரலாம்
குடும்பம்: மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். மகிழச்சியும் சுகமும் கிட்டும். கணவன்-மனைவி இடையே அன்பும் அன்னியோன்யமும் இருக்கும். 6,7,8-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 1,2,3,29,30-ந் தேதிகளில் உறவினர்கள் வருகைகள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.அதே நேரம் 13,14,15-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம் சற்று ஒதுங்கி இருக்கவும். 11,12-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.
உத்தியோகம்: பின்தங்கிய நிலை மாறும். மேல்அதிகாரிகளிடம் நன்மதிப்பு கிடைக்கும் கோரிக்கை நிறைவேறும். பதவி உயர்வு காண்பர். புதிய பதவி கிடைக்கும். மேலும் 26,27,28-ந் தேதிகளில் எதிர்பாராத பலனை காணலாம்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வணிகம்: வருமானம் பெருகும்.தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 16-ந் தேதிக்கு பிறகு பணப் புழக்கம் அதிகரிக்கும். தொழில் விருத்தி அடையும். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். இது வரை இருந்து வந்த எதிரிகளின் இடையூறு அடியோடு மறையும். 4,5,9,10-ந் தேதிகளில் சற்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். சிலருக்கு தலைகுனிவு வரலாம். 18,19-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். 28-ந் தேதிக்கு பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
பொதுநலம்- கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறலாம்
மாணவர்கள்- உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும் மதிப்பெண்கள் அதிகரிக்க தொடங்கும்.போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயம்- உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். நெல், மஞ்சள், கேழ்வரகு, பழவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்கள் நல்ல மகசூலை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும்.பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகலாம். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்களுக்கு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். 20,21-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 28-ந் தேதிக்கு பிறகு பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல்நலம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். கேதுவால் உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். 24,25-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.22,23-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 1,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, மஞ்சள் 16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் ஆகியவை அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும்.1,2,3,6,7,8,11,12,18,19, 20,21,26,27,28,29,30. ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று பார்வையற்றவர்களுக்கு இயனற உதவி செய்யுங்கள். காளி வழிபாடு உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். 16-ந் தேதி வரை சூரியனை தரிசனம் செய்யுங்கள்.


ரிஷபம்


ரிஷப ராசி அன்பர்களே! இம்மாதம் சுக்கிரன் 29-ந் தேதி இடம் மாறினாலும் மாதம் முழுவதும்நற்பலனை கொடுப்பார்.புதன்21-ந் தேதி கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு மாறி நன்மை தருவார். சூரியன் 17-ந் தேதி சிம்மத்தில் இருந்து கன்னிக்கு மாறுகிறார் ஆனாலும் இவர் நன்மை தர மாட்டார்.
ராகு செப்டம்பர் 1-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம்.ஆனால் அவரால் இதுவரை இருந்து வந்த சிற்சில பிரச்சினையையும், திருட்டு சம்பவம்முதலியன மறையும். கேது செப்டம்பர் 1-ந் தேதி 7-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. அவர் மனைவி வகையில் பிரச்சினையை தரலாம். அலைச்சல் ஏற்படும். வீண் மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்சினை வரலாம். உடல் நலம் சுமாராகவே இருக்கும்.
குடும்பம்- சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியினரிடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். 21-ந் தேதிக்கு பிறகு எடுத்த காரியம் வெற்றி அடையும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.9,10-ந் தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர்.விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்களால் நற்சுகம் ஏற்படும். 4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.அதே நேரம் 16,17-ந் தேதிகளில் அவர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்- உங்கள் உழைப்புக்க தக்க பலன்கள் கிடைக்கும். சம்பள உயர்வு போன்றவற்றிற்கு தடை ஏதும் இல்லை.சகஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். 21-ந் தேதிக்கு பிறகு உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது.வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மாத பிற்பகுதியில் ஒன்று சேருவர். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.பொருள் சேரும்.1,2,3,29,30-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும்.
வணிகம்- தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம் 16-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் இருந்து வந்த தொல்லை மறையும் ஆனால் அதன்பின் எதிரிகள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. வீண் பணவிரயம், அலைச்சல் முதலியன 21-ந் தேதிக்கு பிறகு இருக்காது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படூம். 20,21-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 6,7,8,11,12-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம்.
பொதுநலம்- கலைஞர்களுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொதுநல சேவகர்கள் அரசியல்வாதிகள் சீரான பலனையே காணலாம். பிரதிபலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும்.
விவசாயம்- உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். கரும்பு, எள், பயறு வகைகள், காய்கறிகள் போன்றவை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். 21-ந் தேதிக்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும்.பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு
மாணவர்கள்-அதிகமாக சிரத்தை எடுத்து படிப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். ஆனால் 2-ந் தேதிக்கு பிறகு சிறப்பான பலனை காணலாம். நற்பெயர் கிடைக்கும்
பெண்கள்- குதூகலம் ஏற்படும். 21-ந் தேதிக்கு பிறகு நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.அக்கம் பக்கத்தினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். பிள்ளைகளால் பெருமை அடைவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பதவி உயர்வு காண்பர்.22,23-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும்.சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும்.13,14,15 ஆகிய தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.
உடல்நலம்- சீராக இருக்கும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம். 26,27,28-ந் தேதிகளில்ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.24,25-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.
அதிர்ஷ்டம்- 4,8 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, பச்சை நலம் தரும் நிறங்கள்.1,2,3,4,5,9,10,13,14,15,20,21,22,23,29,30.ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- தினமும் சூரியனை தரிசனம் செய்யுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு உங்கள் துயரத்தை போக்கி மனத்தைரியத்தை வரவழைக்கும். 21-ந் தேதி வரை புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதத்தை பொறுத்தவரை குரு, சுக்கிரன், செவ்வாய், கேது மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். சூரியன் 16-ந் தேதி வரையும் புதன் 21-ந் தேதி வரையும் நற்பலனை கொடுப்பார்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
ராகு செப்டம்பர்1-ந் தேதி 12-ம் இடமான ரிஷபத்திற்கு செல்கிறார். இங்கு அவர் பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார்.கேது செப்டம்பர் 1-ந் தேதி நன்மை தரும் இடத்திற்கு வருகிறார். அவர் 6-ம் இடமான விருச்சிகத்திற்கு வருவதன் மூலம் பின்தங்கிய நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும்.
குடும்பம்- வசதிகள் மேம்படும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். குதூகலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப பெரியோர்கள் அனுசரணை கிடைக்கும். 11,12-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 6,7,8-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 18,19-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். .அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.16,17-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்பு உண்டு.
உத்தியோகம்- போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மேன்மை காண்பர். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிலருக்கு 21-ந் தேதிக்கு பிறகு மாற்றம் கிடைக்கலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அதே நேரம் குருவால் எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு கிடைக்கும்.4,5-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்- வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். சூரியனால் லாபம் சிறப்பா இருக்கும். பொருளாதார வளம் கூடும். 16-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம்.21-ந் தேதிக்கு பிறகு தொழில் ரீதியாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். அதிக அலைச்சலையும். வேலைப்பளுவையும் சுமக்க வேண்டியது இருக்கும். 9,10,13,14,15-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.22,23-ந் தேதிகளில் போட்டியாளர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பொதுநலம்- கலைஞர்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல் வாதிகள் சமூகநல சேவகர்கள் சிறப்பான பலனை காண்பர். எதிர் பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் – கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.வெற்றி பெறுவர். ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம்- வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும் வருமானம் குறையாது. பாசி பயறு நெல், கொள்ளு,துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையில் நல்ல வருவாய் கிடைக்கும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்- பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 24,25-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அண்டை வீட்டார் உதவிகரமாக இருப்பர்.
உடல்நலம்- உடல் ஆரோக்கியம் மேம்படும். 16-ந் தேதிக்கு பிறகு பித்தம் மயக்கம் சளிபோன்ற இடர்பாடுகள் வரலாம.ஆனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது.1,2,3, 20,21,29,30-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.26,27,28-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்- 3,9 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை,சிவப்பு16-ந் தேதிவரை செந்தூரம்நலம் தரும் நிறங்கள். 4,5,6,7,8,11,12,16,17,22,23,24,25. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு-பெருமாள் கோவிலுக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வாருங்க்ள. சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சனிக்கிழமை சனீஸ் வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். 16-ந் தேதிக்கு பிறகு காலையில் சூரியனை வழிபடுங்கள். 21-ந் தேதிக்கு பிறகு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

கடகம்

                 

கடக ராசி அன்பர்களே! இந்த மாதபிற் பகுதியில் கூடுதல் பலனை காணலாம். சூரியன் 17-ந் தேதி சிம்மத்தில் இருந்து கன்னிக்கு வந்து நன்மை தர உள்ளார். புதன் 21-ந் தேதி துலாம் ராசிக்கு வந்து நன்மை தருவார். மேலும் சுக்கிரன்,சனி,ராகு உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார்கள்.
ராகுவால் ஏற்பட்ட பண இழப்பு, சிற்சில துயரசம்பவம், முயற்சிகளில் ஏற்பட்ட இடர்பாடுகளுக்கு இனி விடை கொடுக்கலாம். காரணம் செப்டம்பர் 1-ந் தேதி ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான ரிஷபத்திற்கு செல்கிறார். அவர் பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். கேது 6-ம் இடமான தனுசு ராசியில் இருந்து பொன்னையும், பொருளையும் தந்து கொண்டிருந்தார் அவர் செப்டம்பர்1-ந் தேதி 5-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினையை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம்.
சூரியனால் 16-ந் தேதிக்கு பிறகு பொருள் விரையம் மறையும் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் மீனான அவப்பெயர் மறையும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். புதனால் 22-ந்தேதிக்கு பிறகு பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பம்- சிறப்பான நிலையில் இருக்கும். பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வந்து சேரும். 13,14,15-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.விருந்து விழா என சென்று வருவீர்கள். 9,10-ந் தேதிகளில் உறவினர்கள் வருகை இருக்கும். 20,21-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்-தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான பலனை பெறுவர்.சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். 21-ந் தேதிக்கு பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. மேல் அதிகாரிகளின் கருணைபார்வை கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். 28-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 6,7,8-ந் தேதிகளில் உன்னதமான பலனை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வணிகம்- பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள்.உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். 16-ந் தேதிக்கு பிறகு வீண்விரயம் இருக்காது. எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம். பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன 21-ந் தேதிக்கு பிறகு மறையும். 24,25-ந் தேதிகளில் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. 11,12,16,17-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.28-ந் தேதிக்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும்.
பொதுநலம்-புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று நல்ல வசதிகளையும் பெற்று வாழ்வீர்கள். நற்பெயர் கிடைக்கும்.28-ந் தேதிக்கு பிறகுமதிப்பு, மரியாதை கூடும். விருது போன்றவை கிடைக்கும்.சமூகநல சேவகர்கள்சிறப்பான நிலையில் காணப்படுவர். அரசியல்வாதிகள் பிரதி பலனை எதிர்பாராமல் பாடுபடவேண்டும்.
மாணவர்கள்- சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். 21-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயம்- வருவாய்க்கு குறை இருக்காது. பாசி பயறு நெல், எள், உளுந்து, சோளம், பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். 21-ந் தேதிக்கு பிறகு கால் நடை செல்வம் பெருகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்-பல்வேறு முன்னேற்றங்களை காணலாம்.பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும்,ஆனந்தமும் அதிகரிக்கும். சகோதரிகள் மிக உறுதுணையாக இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.18,19-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 26,27,28-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். 28-ந் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.
உடல்நலம்- உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. பயணத்தின் போது சற்று கவனம் தேவை 16-ந் தேதிக்கு பிறகு சூரியனால் இருந்து வந்த கண் தொடர்பான உபாதைகள் பூரண குணம் அடையும். மருத்துவச் செலவு குறையும். 4,5,22,23-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். வயிறு பிரச்சினைவரும். 1,2,3,29,30-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்- 5,8 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, நீலம் 16-ந் தேதிக்குபிறகு செந்தூரம் நலம்தரும் நிறங்கள்.6,7,8,9,10,13,14,15,18,19,24,25,26,27,28. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு-முருகன்கோவிலுக்கு சென்று வாருங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். இதனால் மேலும் முன்னேற்றம் காணலாம்.வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள்.அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம்.16-ந் தேதிவரை தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.

சிம்மம்

                 

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதத்தை பொறுத்த வரை குரு மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். சுக்கிரன்29-ந் தேதி கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு மாறி நன்மை தருவார். குருபகவான் பல்வேறு முன்னேற்றங்களை தந்து கொண்டு இருக்கிறார்.உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார்.
ராகு இது வரை 11-ம் இடமான மிதுன ராசியில் இருந்து பொருளாதார வளத்தையும், பெண்களால் அனுகூலத்தையும் தந்து கொண்டிருந்தார்.அவர் 1-ந் தேதி 10-ம் இடமான ரிஷபத்திற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு அவர் பொருள் இழப்பையும், சிறு சிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார். கேது இது வரை தனுசு ராசியில் அதாவது 5-ம் இடத்தில் இருந்து பிள்ளைகளால் பிரச்சினையை தந்து இருக்கலாம். 1-ந் தேதி அவர் 4-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம்.
மற்றய கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் சிற்சில விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.16-ந் தேதிக்கு பிறகு செலவு அதிகமாக வாய்ப்பு உண்டு. எனவே சிக்கனம் தேவை. புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்குக்கு பாதிப்பு,வீண் மனக்கவலை முதலியன 21-ந் தேதிக்கு பிறகு மறையும்.
குடும்பம்- குரு குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்திவைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 28-ந் தேதிக்கு பிறகு சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.அவர்களால் பொருள் சேரும். 16,17-ந் தேதிகளில் பெண்ககள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 11,12-ந் தேதிகளில் விருந்தினர் வருகை இருக்கும் ஆனால் 22,23-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு உருவாகலாம். எனவே அப்போது அதிக நெருக்கம் வேண்டாம்.
உத்தியோகம்- அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். மேல் அதிகரரி களுடன் அனுசரித்து போகவும். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். உங்கள் பொறுப்புகளை நீங்களே செய்யவும். 9,10-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். 21-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். 28-ந் தேதிக்கு பிறகு சகபெண் ஊழியர்களால் முன்னேற்றம் காண்பீர்கள்.
வணிகம்- தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் .நல்ல வருமானத்தை பெறுவர். புதிய முதலீடு தற்போது தேவையில்லை. 16-ந் தேதிக்கு பிறகு பண விஷயத்தில் கவனம் தேவை. 26,27,28-ந் தேதிகளில் எதிர் பராத வகையில் பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். 16,14,15,18,19-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். 21-ந் தேதிக்கு பிறகு எதிரிகளால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பொதுநலம்- கலைஞர்கள் முயற்சிகளில் இருந்த தடை 28-ந் தேதிக்கு பிறகு மறையும் அதன்பிறகு சிறப்பாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் அனுசரித்து போவது நல்லது. எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள்- சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் உதவியை கேட்டு பெறுவது நல்லது. காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். அதற்கு குரு உதவிகரமாக இருப்பர்..
விவசாயம்- வருமானத்திற்கு குறை இருக்காது. நெல்,மஞ்சள் சோளம் பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.ஆடு,கோழி,பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள்- கணவன் மற்றும் குடும்பத்தாரிடம்நன் மதிப்பை பெறுவீர்கள்.28-ந் தேதி வரை அக்கம் பக்கத்தினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். அதன்பிறகு அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். 20,21-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்க பெறலாம்.1,2,3,29,30-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம்.சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம்- வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. சூரியனால் ஏற்பட்ட அலைச்சல், சோர்வு முதலியன 16-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பிறகு அவரால் கண் தொடர்பான உபாதைகள் வரலாம்.6,7,8-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.வயிறு தொடர்பான உபாதை வரலாம். 24,25-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். 4,5-ந் தேதிகளில் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.
அதிர்ஷ்டம்-2,3 அதிர்ஷ்ட எண்கள் ஆகும். மஞ்சள்,வெள்ளை நலம் தரும் நிறங்கள். 1,2,3,9,10,11,12,16,17,20,21,26,27,28,29,30. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழபாடு- சந்தரப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். பசுவுக்கு பசுந்தழை போட்டால் குடும்ப நிலை மேம்படும்.

கன்னி

          

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன்,கேது பல்வேறு நன்மைகளை தர உள்ளர். மற்றய கிரகங்கள் அனைத்தும் சாதகமான நிலையில் இல்லை.எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது.
ராகு 10-ம் இடமான மிதுன ராசியில் இருந்து மனைவி வகையில் பிரச்சினை- யையும், உங்கள் திறமை மற்றும் புகழில் பங்கத்தையும் கொடுத்திருப்பார்.அவர் 1-ந் தேதி 9-ம் இடமான ரிஷபத்திற்கு மாறுவார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சிற்சில தடைகளை உருவாக்கலாம். கேதுவால் ஏற்பட்ட உடல் உபாதை, பிள்ளைகளால் தொல்லைகள் முதலியன பிரச்சினைகளுக்கு எல்லாம் விடை கொடுக்கும் காலம். அவர் 1-ந் தேதி 3-ம் இடமான விருச்சிகத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தருவார். அதாவது இறை அருளையும், பொருள்உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார்.
சனி 4-ம் இடத்தில் இருப்பதால் பகையையும் பிரிவையும் ஏற்படுத்துவார். அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம். அவரது 3-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.
குடும்பம்- தெய்வ அனுகூலம் கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக 18,19-ந் தேதிகளில் அவர்களால் முன்னேற்றம் காணலாம். 13,14,15-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.ஆனால் 24,25-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். 22,23-ந் தேதிகளில் புத்தாடைஅணிகலன்கள் கிடைக்க பெறலாம். புதனால் வீட்டினுள் இருந்த பிரச்சனை, அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கிலேசம், பொருள் இழப்பு முதலியன 21-ந் தேதிக்கு பிறகு மறையும்.
உத்தியோகம்- போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்ற பீதி 16-ந் தேதிக்கு பிறகு மறையும்1,27,28-ந் தேதிகளில் மிகவும் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். 21-ந் தேதிக்கு பிறகு உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.
வணிகம்-ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். சூரியனால் ஏற்பட்ட பொருள் விரையம், நஷ்டம் முதலியன 16-ந் தேதிக்கு பிறகு மறையும்.அதன்பிறகு அலைச்சல் ஏற்படும். புதனால் சிற்சில தடைகளை சந்திக்க நேரிட்டாலும் அதை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.1,2,3,29,30-ந் தேதிகளில் அதிக பணவரவு இருக்கும். 16,17,20,21-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.பண விரயம் ஆகலாம்.
பொதுநலம்- கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று மகிழ்ச்சியுடன் காணப் படுவீர்கள்.புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் நல்ல பெயர் எடுப்பர். பதவி கிடைக்கும்
மாணவர்கள்- படிப்பில் அசட்டையாக இருக்க வேண்டாம். என்னதான் படித்தாலும் புரியாத நிலை ஏற்படலாம். அதற்காக படிப்பே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பதற்கு ஏற்ப முயற்சி செய்யுங்கள். அதன் பலன் கிடைக்காமல் போகாது.
விவசாயம்- விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக காய்கறி, பழ வகை பயிர்கள் நல்ல மகசூலை தரலாம். கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெறலாம். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள்- சுக்கிரனால் குடும்பத்தில் முன்னிலைபடுத்தப்படுவர். பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 4,5-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். சுகம் ஏற்படும். பணம் கிடைக்கும்.
உடல்நலம்- சீராக இருக்கும். பித்தம், மயக்கம், தோல் நோய்,சளி போன்ற உபாதைகள் வரலாம். 16-ந் தேதிக்கு பிறகுஅலைச்சலும் சோர்வும் ஏற்படும். 6,7,8-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும்.9,10-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
அதிர்ஷ்டம்- 5,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, சிவப்பு நலம் தரும் நிறங்கள்.1,2,3,4,5,11,12,13,14,15,18,19,22,23,29,30.ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள். வயதான முதாட்டிகளுக்கும் சன்னியாசிகளுக்கும் இயன்ய உதவி-தானம் செய்யுங்கள். ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு கோதமை தானம் செய்யலாம். இதனால் பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

துலாம்

          

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமான நிலையில் இல்லை. அதற்காக கவலை கொள்ளவேண்டாம். காரணம் சனிபகவான் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்.16-ந் தேதி வரை சூரியன் சிம்ம ராசியில் இருந்து நன்மை தருவார் அதன்பின் அவர்காளல் நன்மை தர இயலாது.சுக்கிரன் 28-ந் தேதிக்கு பின்னர் நன்மை தருவார். குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளது.
ராகு 1-ந் தேதி 8-ம் இடமான ரிஷபத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம். சிறுசிறு தடைகளை உருவாக்கலாம். கேது உங்கள் ராசிக்கு 3-ம் இடமான தனுசு ராசியில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்தார். இறை அருளையும், பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருந்தார்.அவர் 1-ந் தேதி இடம்மாறி 2-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். சிலரதுவீட்டில் பொருட்கள் திருட்டு போகவும் வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.
குடும்பம்- சூரியனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் நீடிக்கும். தம்பதியினர் இடையே மகிழ்ச்சி ஏற்படும். 20,21-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். 16,17-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 26,27,28-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம. சற்று ஒதுங்கி இருக்கவும்.21-ந் தேதிக்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம்.
உத்தியோகம்- தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 16-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன்பின் பொருள் விரையம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களின் திறமையால் வருமானம் கிடைக்கும். 21-ந் தேதிக்கு பிறகு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்பு உண்டு.யாரையும் எளிதில் நம்பாமல் உங்கள் வேலையை நீங்களே செய்வது நல்லது.13,14,15-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.
வியாபாரம்-வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். 16-ந் தேதிக்கு பிறகு கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. அது இன்று இல்லாவிட்டாலும் என்றாவது பலனை கொடுக்கும் அதை மனதில் கொண்டு உழையுங்கள். ஆனாலும் தற்போது போதிய வருமானம் இருக்கத்தான் செய்யும். புதிய தொழில் தொடங்கலாம் ஆனால் அதிக முதலீடு போடவேண்டாம். 4,5-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். 18,19,22,23-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.
பொதுநலம்-எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர் , போட்டிகள் முதலியன 28-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். 16-ந் தேதிக்கு பிறகுஅதிக சிரத்தை எடுத்தால்தான் விரும்பிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள்-அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். காலம் பொன் போன்றது. அதை வீணாக்காது படியுங்கள். குருவின் பார்வை பக்கபலமாக இருப்பதால் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் காணலாம்.
விவசாயம்- இன்று விதை விதைத்தால் நாளை தானே பலனை பெற முடியும். அதை மனதில் ஏற்று உழையுங்கள். பின்னாளில் அதற்கு பலன் கிடைக்கும். தற்போது காய்கறிகள், கீரை வகைகள், எள்,மொச்சை போன்ற பயறு வகைகளில் அதிக வருமானம் கிடைக்கும். கால்நடை வகையில் சிறப்படையலாம். புதிய சொத்து வாங்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்
பெண்கள்-சிறப்பான மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். 6,7,8 ஆகிய தேதிகளில் நல்ல பலனை காணலாம். 24,25-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள்.28-ந் தேதிக்கு பிறகு அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். பண வரவு கூடும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபத்துக்கு குறை இருக்காது.
உடல்நலம்- உடல்நலம் சீராக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. 11,12-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.9,10-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.
அதிர்ஷ்டம்- 3,7அதிர்ஷ்ட எண் ஆகும். கறுப்பு,செந்தூரம் ஆகியவை நலம் தரும் நிறங்களாகும்.4,5,6,7,8,13,14,15,16,17,20,21,24,25. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- முருகன் கோவிலுக்கு சென்று, ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஞானிகளை தரிசனம்செய்து அவர்களுக்கு காணிக்கை செலுத்துங்கள். புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். 16- ந் தேதிக்கு பிறகு தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள்.

விருச்சிகம்

           

விருச்சிக ராசி அன்பர்களே! செவ்வாய், குரு கொடுத்துக் கொண்டிருக்கும் நன்மையை இந்த மாதமும் தருவார்கள். இந்த மாதத்தை பொறுத்த வரை புதன்22-ந் தேதி வரையும், சுக்கிரன் 28-ந் தேதி வரையும் நற்பலனை கொடுப்பார்கள். 17-ந் தேதி சூரியன் சிம்மத்தில் இருந்து கன்னிக்கு மாறினாலும் அவர் தொடர்ந்து நன்மை தருவார்.
ராகு 1-ந் தேதி 7-ம் இடமான ரிஷபத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல.இடப்பெயர்ச்சியையும், தரம்தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயரை- யும் சந்திக்க நேரலாம். கேது 2-ம் இடமான தனுசு ராசியில் இருந்து பகைவர்களால் தொல்லை, அரசு வகையில் பிரச்சினை, திருட்டு பயம் போன்றவற்றை ஏற்படுத்தி இருப்பார்.தொழில் அதிபர்கள் அரசின் கெடுபிடியால் சிற்சில இன்னலுக்கு ஆளாகி இருப்பார். இந்த நிலையில் கேது 1-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பழைய கெடுபலன்கள் இனி இருக்காது. அவர் காரிய தடையையும், உடல் உபாதையையும் தரலாம்.
பெண்களின் ஆதரவு உண்டு. பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார த்தில் எந்த குறையும் இருக்காது. செவ்வாயால் உங்கள் முயற்சிகள் வெற்றி அடையலாம். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.16-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குடும்பம்- மகிழ்ச்சியும் ஆனந்தமும் நீடிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். 22,23-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.18,19-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 1,2,3,29,30-ந் தேதிகளில் அவர்களால் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்- போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் நற்பலன் கிடைக்க பெறுவர். 17-ந் தேதிக்குபிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதன் சாதகமான நிலையில் இருப்பதால் கோரிக்கை நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 16,17-ந் தேதிகளில் பல நன்மைகள் கிடைக்க பெறலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். 21-ந் தேதிக்கு பிறகு அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை.
வணிகம்- லாபத்தில் குறை இருக்காது. புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 6,7,8-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் வரலாம்.16-ந் தேதிக்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.20,21,24,25-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். 22-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போகவும்
பொதுநலம்- சிறப்பான பலனை காணலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல் வாதிகள், பொதுநல சேவகர்கள் நல்ல நிலையில் இருப்பர். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.
மாணவர்கள்- புதன் சாதகமாக காணப்படுவதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையையும் அறிவுரையையும் கேட்டு பெறவும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம்- பாசி பயறு நெல், கோதுமை, எள், துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்- தேவைகள் பூர்த்தியாகும்.கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். பெண் காவலர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.9,10-ந் தேதிகள் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். 26,27,28-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.
உடல்நலம்-சிறப்பாக இருக்கும். 16-ந் தேதிக்கு பிறகு உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.மருத்துவச் செலவு குறையும்.22-ந்தேதிக்கு பிறகு சிறுசிறு உபாதைள் வந்தாலும் பாதிப்பு ஏதும்வராது. 11,12-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. 13,14,15-ந்தேதிகளில் வயிறு தொடர்பான உபாதை வரலாம்
அதிர்ஷ்டம்- 1,3,9 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். செந்தூரம், மஞ்சள் நலம் தரும் நிறங்கள்.6,7,8,9,10,16,17,18,19,22,23,26,27,28. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- விநாயகர் துதியும் ஆஞ்சநேயர் வழிபாடும் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.நவக்கிரங்களில் சனி-ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் காளி வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும்.

தனுசு

        

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். சூரியன் 17-ந் தேதி கன்னிக்கு வந்து நன்மை தர உள்ளார். புதன் 22-ந் தேதியும், சுக்கிரன்29-ந் தேதியும் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள்.
ராகு 1-ந் தேதி உங்கள் ராசிக்கு 6-ம் இடமான ரிஷபத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம். இனி இடர்பாடுகள் வராது. அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தை கொடுப்பார். கேது 1-ந் தேதி உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் விரையம் ஏற்படலாம்.
பொருளாதார நிலை படிபடியாக அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடைகள் அகன்று காரிய அனுகூலம் ஏற்படும். மாதபிற்பகுதியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அவப்பெயர் பொல்லாப்பு போன்றவை இருக்கும் இடம் தெரியாமல் போகும். நினைத்த காரியம் நிறைவேறும். .
குடும்பம்- வீட்டிற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.குறிப்பாக24,25-ந் தேதிகளில் அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் 20,21-ந் தேதிகளில் அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்- இது சிறப்பான காலம். பின்தங்கிய நிலை மறையும். வேலையில் தொய்வு இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.சகபெண் ஊழியர்கள்களின் ஆதரவு உண்டு. அவர்களால் முன்னேற்றம் காணலாம்.பண வரவு இருக்கும்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 16-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். 18,19-ந் தேதிகளில் எதிர்பாரா வகையில் நற்பலன்கள் கிடைக்க பெறலாம். பொருள் சேரும்.
வியாபாரம்- லாபம் அதிகரித்து கொண்டே இருக்கும். பழைய கடன்கள் அடைபடும். புதிய வியாபாரம் வளர்ச்சி அடையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். செலவுகள் கட்டுப்படுத்தப்படும். 9,10-ந் தேதிகளில் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. 22,23,26,27,28-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 16-ந் தேதிக்கு பிறகு எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
பொதுநலம்- கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மாறுபடுவர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் பெறலாம். வருமானத்திற்கு குறை இருக்காது. எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும்.பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றமான பலனை காணலாம். மாதத் தொடக்கத்தில் சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். 16-ந் தேதிக்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறுவர்.
விவசாயம்- வருமானம் அதிகரிக்கும். நெல்,பாசி பயறு உளுந்து மற்றும் கிழங்கு வகைகள் போன்ற பயிர்கள் சிறப்பை தரும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கலாம்.பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
மாணவர்கள்- இடர்பாடுகள் மறைந்து கல்வியில் சிறப்படையலாம். மதிப்பெண்கள் அதிகரிக்கும்.. புதன் சாதக நிலையில் இருப்தால் போட்டிகளிலும் வெற்றி காணலாம்.
பெண்கள்- குடும்பத்தில் உங்கள் தேவை அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.11,12 ஆகிய தேதிகளில் உன்னத பலனை காணலாம்.சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். 1,2,3,29,30-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
உடல்நலம்- பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். 6,7,8,16,17-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.13,14,15-ந் தேதிகளில் வீண்விதங்களில்5,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். பச்சை ,நீலம் நலம் தரும் நிறங்கள். 1,2,3,9,10,11,12,18,19,20,21,24,25,29,30. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள்.குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.16-ந் தேதி வரை தினமும் சூரிய வழிபாடு நடத்துங்கள். ஊனமுற்றவர் களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் தடைகள் அகன்று நன்மை கிடைக்கும். துர்க்கை வழிபாடு உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.

மகரம்

                  

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். கடந்த மாதம் முக்கிய கிரகங்கள் சாதகமாக இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த நிûல் மாறிவருகிறது. புதன் 21-ந் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறி நற்பலனை தருவார் சுக்கிரன் 29-ந் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு நன்மை தருவார்.
கேது 1-ந் தேதி 11-ம் இடமான விருச்சிகத்திற்கு சென்று நல்ல வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் அவர் கொடுப்பார். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். அதே நேரம் ராகு 1-ந் தேதி 5-ம் இடமான ரிஷபத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை ஆட்டிப் படைக்கலாம்.
குடும்பம்- கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். 20-ந் தேதிக்கு பிறகு பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். தம்பதியினரிடையே அன்பு, பாசம் மேலோங்கும். 26,27,28-ந் தேதிகளில் சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். 6,7,8-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் 22,23-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோம்- அலைச்சலும். வேலைப்பளுவும் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோரிக்கைகளை காலம் நேரம் பார்த்து மாத பிற்பகுதியில் வைக்கவும். பெண்கள் வகையில் தொல்லை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.அரசு ஊழியர்கள் 16-ந் தேதி வரை வேலையில் கவனமாக இருக்கவும். 20,21-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.20-ந் தேதிக்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
வியாபாரம்- வெளியூர் பயணம் அலைச்சல் ஏற்படும். எதிலும் அதக முதலீடு போட வேண்டாம். ஆனால் உங்கள் மூளைபலத்தை பயன் படுத்தி தொழிலில் அதிக ஆதாயம் காணலாம். பெண்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன 16-ந் தேதிக்கு பிறகு மறையும். அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.தீயோர் சேர்க்கையால் அவதி பட்டு வந்தவர்கள் 20-ந் தேதிக்கு பிறகு அவர்கள் பிடியில் இருந்து மீள்வர்.அதன்பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும் 11,12-ந் தேதிகளில் எதிர்பாராத வûயில் பணம் கிடைக்கும். 1,2,3,24,25,29,30-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.
பொது நலம்- கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 28-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். சமூகநல சேவகர்கள் அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள்- ஆசிரியர்களின் உதவியை கேட்டு பெறுவது நல்லது.20-ந் தேதிக்கு பிறகு போட்டிகளில் வெற்றி காணலாம்.கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம்- உழைப்பே உங்கள் முதலீடு. அனாவசிய செலவை குறையுங்கள். யாரையும் நம்பி காசை கொடுத்துவிட வேண்டாம். எந்த வேலையும் உங்கள் நேரடி மேற்பார்வையில் நடப்பது நல்லது. மானாவாரி பயிரில் நல்ல மகசூல் கிடைக்கும். .20-ந் தேதிக்கு பிறகு ஆடு,கோழி,பசு,கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம்.பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்- குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை கண்டிப்பாக தேவைபடும். .தோழிகளால் உதவி கிடைக்கும் 20-ந் தேதிக்கு பிறகு அக்கம் பக்கத்தினர் மிகவும் உதவிகரமாக இருப்பர். கணவனோடு விருந்து விழா என்று சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். 4,5-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம் 13,14,15-ந் தேதிகளில் சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம்-வயிறு தொடர்பான உபாதை வரலாம் பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 16,17-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்18,19-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.9,10-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டம்- 6,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு, பச்சை நலம் தரும் நிறங்கள்.4,5,11,12,13,14,15,20,21,22,23,26,27,28. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு-சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள்.வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.அப்போது மஞ்சள் ஆடை தானம் கொடுக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று செவ்வாய்க் கிழமை ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். இதனால் தடைகள் விலகி மறைந்து முன்னேற்றம் காணலாம்.சூரியனை தரிசனம் செய்து வாருங்கள்

கும்பம்

  

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன் 21-ந் தேதி வரை கன்னி ராசியில் இருந்து நன்மை தருவார்.மேலும் செவ்வாய்,குரு,சனி ஆகியோர் நற்பலனை கொடுப்பார்கள்.கடவுனிள் கருணை உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும்.
ராகு 1-ந் தேதி 4-ம் இடமான ரிஷபத்திற்கு வருவதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம். கேது1-ந் தேதி 10-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கும் அவர் உடல் உபாதைகளை தரலாம்.
குடும்பம்- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. கணவன்- மனûவி இடையே அன்பும் பாசமும் ஏற்படும். 1,2,3,29,30-ந் தேதிகளில் பெண்கள் வகையில் உதவி கிட்டும்.9,10-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் 24,25-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்- சிறப்பான பலனை அடைவீர்கள்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் பதவி உயர்வு காண்பர். 22,23-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு தேடி வரும்.20-ந் தேதிக்கு பிறகு மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
வணிகம்- ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய தொழில் அனுகூலத்த கொடுக்கும். 16-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் பிரச்சினை வரலாம். எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொளள்வும். 13,14,15-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 4,526,27,28-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
பொதுநலம்- கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 28-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.
மாணவர்கள்- கல்வியில் நல்ல வளத்தை காணலாம். பின்னதங்கிய நிலை மறையும். நல்ல மதிப்பெண் கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம்-நல்ல வருமானத்தை காணலாம். நெல், பாசி பயறு, மஞ்சள்,சோளம், கரும்பு எள் போன்ற பயிர்களில் நல்ல மகசூலை காணலாம். பசு வளர்ப்பில் நல்ல வருவாய் கிடைக்கும்.புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள்- உற்சாகமான நிலையை அடைவீர்கள்.உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.உங்களால் குடும்பத்தாருக்கு நற்பெயர்கள் கிடைக்கும்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். சக ஊழியர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். தங்கள் கோரிக்கைகளை 21-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.6,7,8-ந் தேதிகளில் நகை-ஆபரணங்கள் வாங்கலாம். 16,17-ந் தேதிகளில் தேதிகளில் நல்ல பலனை காணலாம். சகோதரிகளால் நற்சுகம் ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம்- சூரியனால் இருந்து வந்த வயிறு தொடர்பான உபாதைகள் 16-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். 20,21-ந் தேதிகளில் வயிறு தொடர்பான உபாதை வரலாம்.18,19-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் நேரத்தை செலவிடவும்.
அதிர்ஷ்டம்- 3,9 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். மஞ்சள், சிவப்பு நலம் தரும் நிறங்கள்.1,2,3,6,7,8,13,14,15,16,17,22,23,24,25,29,30.ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்க ளாக அமையும்.
வழிபாடு- தினமும் சூரியதரிசனம் செய்து ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வயதான மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

மீனம்

                        

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் 28-ந் தேதி வரையிலும், சூரியன் 16-ந் தேதி வரையிலும் நற்பலனை கொடுப்பார்கள். புதன்20-ந் தேதிக்கு பிறகு நற்பலனை கொடுப்பார்.தெய்வ அனுகூலம் கிடைக்கும்.
ராகு 4-ம் இடமான மிதுன ராசியில் இருந்து இருந்து வீண்கலகத்தையும், அலைச்- சலையும் உருவாக்கி இருப்பார். குடும்பத்தில் பகையையும், பிரிவையும் உருவாக்கி இருக்கலாம்.அவர் 1-ந் தேதி 3-ம் இடமான ரிஷபத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தரஉள்ளார். குறிப்பாக நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் கொடுப்பார்.
கேது 10-ம் இடமான தனுசு ராசியில் இருந்து உடல் உபாதைகளை தந்திருப்பார். அவர் 1-ந் தேதி 9-ம் இடமான விருச்சிகத்திற்கு போகிறார். அதுவும் சிறப்பான இடம் அல்லதான்.ஆனால் அவரால் இருந்து வந்த உடல் உபாதைகள் குணம் அடையும். அதே நேரம் கேதுவால் பொருள் இழப்பு ஏற்படலாம்.
மாத முற்பகுதியில் சூரியனால் பணப்புழக்கம் இருக்கும். காரிய அனுகூலமும் ஏற்படும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.16-ந் தேதிக்கு பிறகுஅவர் சாதமகற்ற இடத்திற்கு செல்வதால் சிலர் அவப்பெயரை சந்திக்கலாம். எனவே வீண்விவாதங்கû தவிர்க்கவும்..
குடும்பம்- சுக்கிரனின் பலத்தால் குடும்பம் குதூகலமாக இருக்கும். பெரியோர்- களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.பக்தி உயர்வு மேம்படும். 20-ந் தேதிக்கு பிறகு புதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். 4,5-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உறுதுணையா இருப்பார்கள்.11,12-ந்தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.ஆனால் 26,27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிûட்கும்.
உத்தியோகம்-வேலையில் திருப்தி காண்பீர்கள்.உங்கள் செல்வாக்கு அதிகரிக்- கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். புதனின் அருளால் 20-ந் தேதிக்கு பிறகு சிலர் புதியபதவி கிடைக்க பெறுவர்.அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை. 24,25-ந் தேதிகளில் பல நன்மைகள் கிடைக்க பெறலாம்.
வணிகம்-வருமானம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கும். பகைவர்- களை வெற்றி கொள்வீர்கள். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். புதிய வியாபாரம் அனு கூலத்தை தரும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். 16,17-ந் தேதிகளில் எதிர்பாராக வகையில் பணவரவு இருக்கும். 1,2,3,6, 7,8,29,30-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.
பொதுநலம்-கலைஞர்கள் சிறப்பான பலனை காணலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்.அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.
மாணவர்கள்- 20-ந் தேதி முதல் வளர்ச்சி இருக்கும். கல்வியில் சிறப்படைவர். நல்ல மதிப்பெண்கள், போட்டிகளில் வெற்றி போன்றவை கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயம்- அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் பயிர் செய்யுங்கள். அதன் மூலம் ஓரளவு வருமானமும் கிடைக்கும். நஷ்டம் தவிர்க்கப்படும்.நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. கிழங்கு காய்கறி பழவகை பயிர்கள் நல்ல மகசூலை தரலாம். கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். வழக்கு விவகாரங்களில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
பெண்கள்- குடும்பத்தில் அனைவராலும் போற்றபடுவீர். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்சினை மறையும்.தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். 9,10-ந் தேதிகளில் பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.18,19-ந் தேதிகளில் உல்லாச பயணம் மேற்கொள்ளலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். புதன் 20-ந் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உயர்வை தருவார். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உடல்நலம்-சிறப்பாக இருக்கும். சூரியனால் 16-ந் தேதிக்கு பிறகு வயிறு பிரச்சினை வரலாம்.அலைச்சல் அதிகரிக்கும்.22,23-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். 13,14,15-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். 20,21-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.
அதிர்ஷ்டம்- 5,7ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும்.வெள்ளை,நீலம்.16-ந் தேதி வரை செந்தூரம். 4,5,9,10,16,17,18,19,24,25,26,27,28. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு- சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். 20-ந் தேதி வரை புதன் கிழமை குலதெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்ச்னை செய்யலாம்.16-ந் தேதிக்கு பிறகு அதிகாலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள். இதனால் அவப்பெயர்,செல்வாக்குக்கு பாதிப்பு முதலியன மறையும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.