தமிழகத்தில் இன்று மட்டும் 5,870 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்
1 min readIn Tamil Nadu today alone, 5,870 people have recovered from corona
29-8-2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 5,870 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள்.
கொரோனா
தமிழகத்தில கொரோனா பரவல்பற்றிய விவரங்களை தினமும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 6,352 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 6,326 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 26 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,15,590 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 149 ஆய்வகங்களில் 80,988 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 46 லட்சத்து 54 ஆயிரத்து 797 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில் 3,881 பேர் ஆண்கள், 2,471 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,51,013 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,64,548 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 6,045 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 ஆக உள்ளது.
87 பேர் சாவு
தமிழ்நாட்டில் இன்று(சனிக்கிழமை) மட்டும் கொரோனாவுக்கு 87 பேர் இறந்துள்ளனர். இதில் 59 பேர் அரசு ஆஸ்பத்திரிகிளலும் 28 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா வுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,726 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 19 ஆயிரத்து 323 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 42 ஆயிரத்து 485 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 53 ஆயிரத்து 782 பேர்.
மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ளது.