May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 6,406 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

1 min read

In Tamil Nadu, 6,406 people recovered from the corona

3-8-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,406 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம் பற்றிய விவரங்களை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( ஞாயிற்றுக்கிழமை) மாலை வெயிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 6,495 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 6,468 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 27 பேர் வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,22,085 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 149 ஆய்வகங்களில் இன்று மட்டும் 83,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 47 லட்சத்து 38 ஆயிரத்து 47 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 3,824 பேர் ஆண்கள். 2,671 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,54,837. கொரோனா பாதித்த பெண்களின் மொத்த எண்ணிக்கை 1,67,219. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 6,406 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 ஆக உள்ளது.

94 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 94 பேர் இறந்தனர். இவர்களில் 57 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 37 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளியிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,231 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 52,721 பேர் கொரோனாவக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில்

சென்னையில் மட்டும் இன்று 1,249 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இவர்களையும் சேர்த்து சென்னையில் மட்டும் இதுவரை 1,34,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைத் தவிர கோவையில் 498 பேருக்கும், சேலத்தில் 329 பேருக்கும், கடலூரில் 383 பேருக்கும், செங்கல்பட்டில் 419 பேருக்கும், திருவள்ளூரில் 293 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 193 பேருக்கும், வேலூரில் 167 பேருக்கும், விழுப்புரத்தில் 183 பேருக்கும், கன்னியாகுமரியில் 122 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் 139 பேருக்கும், தென்காசியில் 84 பேருக்கும், தூத்துக்குடியில் 91 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு இன்று சென்னையில் 16 பேரும், கோவையில் 5 பேரும், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பத்துார், வேலூரில் தலா 3 பேரும், சேலத்தில் 9 பேரும், செங்கல்பட்டு, 8 பேரும், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருச்சி தலா 4 பேரும் திருநெல்வேலியில் 2 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரி,நாமக்கல், ராமநாதபுரம், ராணிபேட்டை தலா ஒருவரும் இறந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 1,427 பேர் சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,18,235 ஆக உயர்ந்துள்ளது. கடலுாரில் 483 பேரும் கோவையில் 451 பேரும் செங்கல்பட்டு 382 பேரும், சேலம் 274 பேரும், ராணிபேட்டை 267 பேரும், காஞ்சிபுரம் 223 பேரும், தேனி 216 பேரும் திருவள்ளூர் 192 பேரும் திருவாரூர் 165 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.