பிறவிப்பிணிகளை நீக்கும் வழிபாடு
1 min read
piravi pini/ Narasima laxmi valipadu
ஆவணி மாதம் அமாவாசைக்குப்பிறகு பதிநான்காம் நாள் வரும் சதுர்தசி திதி நாளில் லட்சுமி நரசிம்மரை வழிபடுவது சிறப்பு. பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு லட்சுமிதேவியை மடியில் அமர்த்தியபடி இருக்கும் கோலம்தான் லட்சுமி நரசிம்மர். இவரை இந்த நாளில் வழிபட்டால் பிறவிப் பிணிகள் நீங்கும். மேலும் இந்த நாளில் ஆனந்த கோலத்தில் அருள்பாலிக்கும் பத்மநாபரை கணவன்&மனைவி இருவரும் பூஜை செய்து வழிபட்டால் அனைத்து கஷ்டங்களும் நீங்கும். எனவே இந்த நாளுக்கு அனந்த பத்மநாபசதுர்தசி என்று பெயர். இன்று நடராஜர் அபிஷேகம் கண்டு வழிபடலாம். இந்த சிறந்த நாள் செப்டம்பர் 1&ந் தேதி ( செவ்வாய்க்கிழமை) வருகிறது.