மகரம்/ ராகு-பெயர்ச்சி பலன்கள் / காழியூர் நாராயணன்
1 min readRagu-kethu peyarchi palan / Capricorn / Kaliyur Narayanan
1-9-2020
உயர்ந்த ஆடைகளை அணிய விரும்பும் மகரராசி அன்பர்களே! சமுதாயத்தில் நன் மதிப்போடு வாழவே நீங்கள் விரும்புவீர்கள். மனைவி -யிடம் நல்அன்பை செலுத்துவீர்கள். அவர்களின் நல்ல கருத்துக்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் இடத்திலும் அன்பு செலுத்துவீர்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்களுக்கு சுமாரான பலனை தந்தாலும் கேது சிறப்பான பலனை தருவார்.
கேது இதுவரை 12-ம் இடமான தனுசு ராசியில் இருந்து பொருள் இழப்பை தந்து கொண்டிருந்த அவர் இப்போது 11-ம் இடமான விருச்சிகத்திற்கு சென்று நல்ல வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் அவர் கொடுப்பார்.
ராகு இதுவரை 6-ம் இடமான மிதுன ராசியில் இருந்து பல்வேறுநன்மைகளை தந்து கொண்டிருந்தார். அவர் உடல் ஆரோக்கியத்தை -யும், காரியஅனு கூலத்தையும் தந்திருப்பார். இபபோது ராகு 5-ம் இடமான ரிஷபத்திற்கு வருகிறார்.இது சிறப்பான இடம் அல்ல.5-ம் இடத்தில் இருக்கும் போது, பல்வேறு இன்னல்களையும், இடையூறு களையும் தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உருவாக்கலாம். அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை ஆட்டிப்படைக்கலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான விருச்சிகத் -தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.
பொன், பொருள் கிடைக்கும்
ராகுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வையால் நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
மற்றகிரகங்களின் நிலை
சனிபகவான் தற்போது 12-ம் இடமான தனுசு ராசியில் இருக்கி- றார்.அவரால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7-ம் இடத்துபார்வை மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம்.இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப் -பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேபடும். தனுசு ராசியில் இருக்கும் சனிபகவான் 2020 டிசம்பர் 26-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். இது ஏழரை சனியின் உச்சக்கட்டம். பொதுவாக சனி உங்கள் ராசியில் இருக்கும் இரண்டரை ஆண்டுகாலம் உடல்நலம் பாதிக்கப்படலாம், உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும். ஆனால் அதைக்கண்டு அஞ்ச வேண்டாம்.சனிபகவானின்3-ம் இடத்துப் பார்வையால் அவர் காரிய -அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார்.
குருபகவான் இப்போது உங்கள்ராசிக்கு 12-ம் இடத்தில் இருக் கிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.அவர் 2020 நவம்பர் 15-ந் தேதி பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.ஆனால் குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். அவர் ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். அவர் 2021 நவம்பர் 14-ந் தேதி முழுபெயர்ச்சி அடைந்து 2-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும்.தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள்சரண் அடையும் நிலை ஏற்படும்.அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 3-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் முயற்சியில் தடை ஏற்படும். அதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம். குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் உற்சாகம் பிறக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
இனி விரிவான பலனை காணலாம்.
2020 செப்டம்பர் முதல் 2020 டிசம்பர் வரை
பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும்.வீடு,மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிலவும். நவம்பர்14-ந் தேதிக்கு பிறகு குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல சிறப்பான வரனாக அமையும்.பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும்.கணவன்-மனைவி இடையே ஒற்றுமைஅதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள் உங்களை நாடி வருவர்.
போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.நவம்பர்14-ந் தேதிக்கு பிறகு குரு மன வேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார்.வீண் விரோதத்தை உருவாக்குவார். இருப்பினும் குருவின்பார்வையால் கோரிக்கைகள் நிறைவேறும்.சிலர் இடமாற்றம் காண்பீர்கள். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரம் அதிக வருமானத்தைக் காணலாம். புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தைத் தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். கேதுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும்.மாணவர்கள் அயராது உழைக்க வேண்டியதிருக்கும் நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு சோம்பல் உங்களை பின்தங்கிய நிலைக்கு தள்ளலாம். விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் ,கொள்ளு, துவரை போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும்.கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையயும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் யாருடைய உதவியையும் நாடாமல் தன்கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். உடல்நலம் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் அடைவர். நீண்ட காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.
2021ஜனவரி முதல் 2021நவம்பர் வரை
கேதுவின்பலத்தால் நல்ல பணப்புழக்கம் ஏற்படும். தடைகள் விலகும். சனிபகவான் சாதகமற்ற இருப்பதால் பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. குருவின் பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார்.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மேல்அதிகாரி -களிடம் அனுசரித்து போவது நல்லது.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். பெண்கள் வகையில் அனுகூலம் கிட்டும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். 4-4-2021முதல்14-9-2021 வரை பகைவர்களின் தொல்லையில் சிக்கி அலைக்கழிந்தவர் -கள் இனி தைரியமாக செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிகமுயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். சமுகநல சேவகர்கள் எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பின்தங்கிய நிலைக்கு தள்ளமாட்டீர்கள் ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும்.விவசாயம் புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண வரவு இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்
.
2021 டிசம்பர் முதல்
உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும்.குடும்பத்தில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. எனவே சற்று கவனமாக இருக்கவும்.
உத்தியோகத்தில் குருபகவானால் முன்னேற்றம் இருக்கும். வேலைப்பளு குறையும். உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களு -க்கு மேல் அதிகாரிகளின்அனுசரணை கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணினி, அச்சுத்துறை, பத்திரிகை, கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நலசேவகர்கள் தொடர்ந்து சிறப்பு பெறுவர். மாணவர்கள் நல்ல மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். விவசாயிகளுக்கு பாசி பயறு நெல்,கொள்ளு,துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய சொத்து வாங்கலாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும்.தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்களு- க்கு புதிய பதவிதேடி வரும். உடல் நலம் மனதில் தளர்ச்சிமறையும்
பரிகாரம்-. ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.