மினதும் / ராகு-கேதுபெயர்ச்சி/ காழியூர் நாராயணன்
1 min read
Ragu-kethu peyarchi / Gemini / Kaliyur Narayanan
1-9-2020
நல்ல பேச்சுவன்மையும் சிறந்த எண்ணமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! நீங்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பீர்கள். ஆச்சாரங்களை கடை பிடித்து வருவீர்கள். தெய்வ நம்பிக்கை உடைய நீங்கள் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கண்ணியமும் உடையவர்கள். சொந்த திறமையால் முன்னேற்றம் அடைய நினைப்பவர்கள். கடந்த ராகு-கேது பெயர்ச்சியால் நற்பலகள் கிடைத்திருக்காது. இப்போது இந்த ராகு-கேது பெயர்ச்சி மூலம் நன்மை கிடைக்க உள்ளது. தற்போது கேது நன்மை தரும் இடத்திற்கு வருகிறார். அவர் இதுவரை 7-ம் இடமான தனுசு ராசியில் இருந்து மனைவி வகையில் பிரச்சினையையும் உடல் உபாதைகளையும் தந்திருப்பார். இப்போது 6-ம் இடமான விருச்சிகத்திற்கு வருவதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரியஅனுகூலம் ஏற்படும். மேலும் அவரது பின்நோக்கிய 4-ம் இடத்துப்பார்வை சாதகமாக உள்ளது.
கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலனை தரஇயலாது. அவர் இதுவரை உங்கள் ராசியில் இருந்து உறவினர்கள் வகையில் பிரச்சினையை உருவாக்கி இருக்கலாம். இப்போது அவர் இடம்மாறி 12-ம் இடமான ரிஷபத்திற்கு செல்கிறார். இங்கு அவர் பொருள் விரயத்தையும்,தூரதேச பயணத்தையும் கொடுப்பார். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான விருச்சிகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.
தெய்வ அனுகூலம் கிடைக்கும்
கேதுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வையால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். இதனால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும்.
பகைவர்களை வெற்றி கொள்வீர்கள்
ராகுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வையால் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார்.பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
மற்றகிரகங்களின் நிலை
முக்கிய கிரகங்களில் சனிபகவான் தற்போது 7-ம் இடமான தனுசு ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையை உருவாக்குவார்.அலைச்சல் இருக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம். அவர் 2020 டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 8-ம் இடமான அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும்.சிலர் ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை உருவாகும்.
குருபகவான் 7-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவேகுரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார். அவர் 2020 நவம்பர் 15-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 8-ம் இடமான மகரராசிக்கு மாறுகிறார்.அப்போது அவரால் நன்மைதர இயலாது. குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார். ஆனால் அப்போது அவரது 7-ம் இடத்துப் பார்வையால் எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். மேலும் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறகும். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். குரு ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் 2021 நவம்பர் 14-ந் தேதி முழுபெயர்ச்சி அடைந்து 9-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 10-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை.
இனி விரிவான பலனை காணலாம்.
2020 செப்டம்பர் முதல் 2020 டிசம்பர் வரை
காரிய அனுகூலம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்பு,பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும் வீட்டுக்குதேவையான சகல வசதிகளையும் பெருவீர். சிலர் சற்று முயற்சி எடுத்து புதியவீடு கட்டுவர்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு செலவுகள்அதிகரிக்கும்.சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கிய காரியங்களை பெரியோர்களின் ஆலோசனையின்பேரில் நிறைவேற்றவும். உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் மேம்படும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு சம்பளஉயர்வு, பதவிஉயர்வு வரும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படும்.
ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிகலாபத்தை பெறுவர். அரசு வகையில் அனுகூலம் காணப்படுகிறது. பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல வளத்தைக் காணலாம். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிக்குள்ளாக -லாம்.ஆனாலும் குருவின் பலத்தால் அவை முறிடிக்கும் வல்லமை கிடைக்கும். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம்.
கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.அரசியல்வாதிகளுக்கு காரியத்தடை,பொருள் நஷ்டம், அவப்பெயர் முதலியன மறையும்.மாணவர் -கள்சிறப்பான பலனைக் காணலாம். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர்.
கைத்தொழில் செய்வோர் மனதில் நிம்மதி அடைவர். கூலி வேலை செய்வோரும் திருப்திகரமாக வாழ்வர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.புத்தாடை, அணிகலன்கள் வாங்கிகுவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். அண்டைவீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
2021ஜனவரி முதல் 2021நவம்பர் வரை
பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும்.ராகு தூரதேச பயணத்தை கொடுப்பார்.இந்த காலத்தில் கணவன் -மனைவி ஒருவருக் கொருவர் பொறுமையாகவும், விட்டு- கொடுத்தும் போக வேண்டும். சிலரது வீடுகளில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. மன உளச்சல், உறவினர் வகையில் வீண்பகை உருவாகலாம். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர்13-ந் தேதி வரை மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும்.
உத்தியோகம் மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். சிலர் அதிக செலவை சந்திக்க வேண்டிய -திருக்கும்.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர்13-ந் தேதி வரை தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். புதிய பதவி தேடிவரும். வியாபாரம் புதிய முதலீடு விஷயத்தில் அதிககவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். ஏப்ரல்4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர்.
கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம். புதிய பதவி தேடிவரும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.
விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்கு வதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர்.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பெண் காவலர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. உடல்நலம் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
2021 டிசம்பர் முதல்
மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம்.உறவினர்கள் வகைகளில் அன்னியோனியம் நிலவும்.
உத்தியோகம் உங்கள் திறமை பளிச்சிடும். சிலர் இடமாற்றம் காண்- பீர்கள். அதுவும் விரும்பிய இடமாக அமையும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர். வேலையோடு பக்கத்தொழில் செய்பவர்கள் நல்ல வளத்தோடு இருப்பர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும்.
கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பட்டம் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான பலனை பெறுவர். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயிகளுக்கு நெல்,மஞ்சள், கடலை, எள், கொள்ளு பனை பொருள் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். ஆடுகள், கோழி, பசுகள், கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காண்பீர்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பரிகாரம்- சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுங்கள். பார்வையற்றவர் களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.