April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

துலாம்/ ராகு-பெயர்ச்சி பலன்கள் 2020-2021

1 min read

RAGU-KETHU PEYARCHI PALAN / Libra / Kaliyur Narayanan

1-9-2020
சிறந்த நண்பர்களையும், நல்ல உறவினர்களையும் கொண்ட துலாம் ராசி நண்பர்களே! நீதி நேர்மையுடன் நீங்கள் நடக்க விரும்புவீர்கள். மனதில் சரி என்று பட்டதை மறைக்காமல் வெளியிடும் மனப்பக்குவம் கொண்டவர்கள். இதுவரை ராகு 9-ம் இடமான மிதுன ராசியில் இருந்து காரியத் தடங்கலை ஏற்படுத்தி இருந்தார். எதிரிகளின் வகையில் இருந்து இடையூறு வந்திருக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். இப்போது ராகு 8-ம் இடமான ரிஷபத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம்.
கேது இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான தனுசு ராசியில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அவர் இறை அருளையும், பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருந்தார். எடுத்த காரியங்களில் வெற்றியையும் தந்திருக்கலாம். பொருளாதார வளமும் அவரால் மேம்பட்டிருக்கும். இப்போது கேது இடம்மாறி 2-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். வீட்டில் பொருட்கள் திருட்டு போகவும் வாய்ப்பு உண்டு. கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான சிம்மத்தில் விழுகிறது.இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் காரிய அனுகூலம் ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வசதிகள் பெருகும்
கேதுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் உற்சாகம் பிறக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.வசதிகள் பெருகும். பொருள் சேரும்.தேவைகள் பூர்த்தியாகும்.


மற்றகிரகங்களின் நிலை
சனிபகவான் தற்போது 3-ம் இடத்தில் இருக்கிறார். அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார்.பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். இந்த நிலையில்சனிபகவான்2020டிசம்பர்26-ந் தேதி மகர ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார்.இது அவ்வளவு சிறப்பானஇடம் என்று சொல்ல முடியாது. சனிபகவான் குடும்பத்தில் வீண்விரோதத்தை கொடுப்பார்.ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை மிகச்சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிக சாதகமான நிலை.
குருபகவான் தற்போது 3-ம் இடமான தனுசு ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வுகிடைக்காது. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். அவர் 2020 நவம்பர் 15-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 4-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சுமாரான இடம் தான். அப்போது குரு மன உளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். ஆனால் அவர் ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். குரு 2021 நவம்பர் 14-ந் தேதி முழுபெயர்ச்சி அடைந்து 5-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். அவர் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.அதன்பிறகு2022 ஏப்ரல் 14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 6-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும்


2020 செப்டம்பர் முதல் 2020 டிசம்பர் வரை
வீட்டினுள்சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். கவனம் தேவை. ஆனால் நவம்பர் 11-ந் தேதி வரை குருவின் பார்வையால் நற்பலனை தருவார். இதனால் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.
உத்தியோகம் குருவின் பார்வையால் உயர்வை தருவார். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். ஆனால் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது.அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவேஉங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணை- யாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் குருவின் பார்வையால் கல்வியில் ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும். நவம்பர்14-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள் பொதுவாக எந்த பிரச்சினையிலும் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் இடமாற்றத்தை காணலாம். வேலையில் அக்கறையுடன் இருக்கவும். உடல் நலம் சிறுசிறு உபாதைகள் வரலாம்.


2021ஜனவரி முதல் 2021நவம்பர் வரை
வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை குரு நற்பலனை தருவார். இதனால் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும்.
உத்தியோகம் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். அரசுஊழியர்களுக்கு ஒரு பிடிப்பு நிலை இல்லாத நிலை இருந்து வரலாம். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை குரு உயர்வை தருவார். புதிய பதவி கிடைக்கும். வியாபாரம் நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். அரசு வகையில் இடையூறுகள் இருக்கும்.எது எப்படியானாலும் குருவின் பலத்தால் அவை அனைத்தையும் முறிடிக்கும் வல்லமை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்துபடித்தால்தான் பலன் கிடைக்கும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை வெற்றி பெறுவர். விரும்பிய பாடங்களை பெறுவர்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும்.
பெண்கள் குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை தேவைபடும். தோழி- களால் உதவி கிடைக்கும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை சிறப்பு பெறுவர்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். உடல் நலம் சிறுசிறு உபாதைகள் வரலாம்.


2021 டிசம்பர் முதல்
இந்த காலத்தில் குருபகவான் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பும், பாசமும் நீடிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையிலும் பிரச்சினை அகன்று அன்னியோனியம் பிறக்கும். அதோடு அவர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை காணலாம். வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருட்டு பயம் மறையும்.
உத்தியோகம் வேலையில் திருப்தி காண்பர். மேல்அதிகாரிளின் ஆதரவும் ஆலோசனனையும் கிடைக்கும்.வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள்உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக் -காமல் செய்யவும்.வியாபாரிகளுக்கு பணவிரயம், பணம் திருட்டு போன்றவை தடுக்கப்படும். கணினித் தொழில், அச்சுத் தொழில், பத்திரிகை, தரகு போன்றவை சிறப்படையும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். புதிய வியாபாரம் தொடங்குவதோ, அதிக முதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம் உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறலாம்.பொதுநல சேவகர்களுக்கு புகழ், பாராட்டுகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு படிப்பில்ஆர்வம் பிறக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விவசாயிகள் நல்ல வளத்தை காண்பர். விளைச்சல் சிறப்பாக இருக்கும். பசுவளர்ப்பு மற்றும் பயறு வகைகள் மூலம் நல்ல வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர்.ஆடம்பர பொருட் -களை வாங்குவீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்- தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள் நாக தேவதையை வணங்கி வாருங்கள்.ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். 2020 டிசம்பர் 26-ந் தேதினிசக்கிழமை சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.