May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

கன்னி / ராகு-பெயர்ச்சி பலன்கள்/ காழியூர் நாராயணன்

1 min read

Ragu-kethu peyarchi palan / Virgo/ Kaliyur Narayanan

1-9-2020
மென்மையான அணுகுமுறையை கொண்ட கன்னிராசி அன்பர்களே! உங்களது பண்பும், நீதியும் நேர்மையும் எல்லோரையும் மிக எளிதில் கவரும். பொதுவாக நல்ல செல்வாக்கும், செல்வமும் படைத்தவர்களாக இருப்பீர்கள். மென்மையான பேச்சும், நல்ல குணநலமும் கொண்டவர்கள் நீங்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி மிக சிறப்பாக அமையும். இது வரை இந்த 2 கிரகங்களும் திருப்பதியற்ற நிலையில்தான் இருந்தன. அதாவது ராகு 10-ம் இடமான மிதுன ராசியில் இருந்து மனைவி வகையில் பிரச்சினையையும், உங்கள் திறமை மற்றும் புகழில் பங்கத்தையும் கொடுத்திருப்பார். கேது 4-ம் வீடான தனுசு ராசியில் இருந்து உடல் உபாதைகளையும், பிள்ளைகளால் தொல்லைகளையும் தருவார்.இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் விடைகொடுக்கும் காலம். கேது 3-ம் இடமான விருச்சிகத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தருவார். அதாவது இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதை- களை குணமாக்குவார். ராகு 9-ம் இடமான ரிஷபத்திற்கு மாறுவார்.இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலாபலன்கள் மாறுபடும். உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. ஆனால் காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது 4,7, மற்றும் 11-ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சாதகமாக உள்ளன. இதன் மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
ராகுவின்பின்நோக்கிய பார்வையால் பொன்,பொருள் கிடைக்கும்
ராகுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வையால் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருவார். 4-ம் இடத்துப் பார்வையால் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். 4-ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.


மற்றகிரகங்களின் நிலை
சனிபகவான் தற்போது 4-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. சனிபகவான் குடும்பத்தில் வீண் விரோதத்தை கொடுப்பார். ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவா- கும். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன்மூலம் நன்மை கிடைக்கும். இந்த நிலையில் 2020 டிசம்பர் 26-ந் தேதி சனி மகரராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.அப்போது அவர் சிற்சில பிரச்சினைகளை தருவார் அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துபார்வை சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும்.
குரு 4-ம் இடமான தனுசு ராசியில் இருக்கிறார். இந்த இடம் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. அவர் மனஉளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். ஆனால் அதைகண்டு கவலை கொள்ள வேண்டாம். மேலும் இங்கு குருபகவான் நீண்ட நாட்கள் நீடிக்க மாட்டார். அவர் 2020 நவம்பர் 15-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 5-ம் இடமான மகரராசிக்கு மாறுகிறார்.இது சிறப்பான இடம். குரு குடும்- பத்தில் குதூகலத்தை கொடுப்பார்.பெண்களால் மேன்மை கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மேலும் குருவின் 5 மற்றும் 7-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக உள்ளது. இதனால் இந்த காலத்தில் நல்ல பலனை பெறலாம். அவர்ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். அவர் 2021 நவம்பர் 14-ந் தேதி முழுபெயர்ச்சி அடைந்து 6-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை.அவரால் உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும். ஆனால் குருவின் 9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் துணிச்சல் பிறக்கும்.பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அதன்பிறகு14-4-2022 அன்று பெயர்ச்சி அடைந்து 7-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம்.அவர் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும்.பணப்புழக்கம் அதிகரிக்கும்.தேவைகள் பூர்த்தியாகும்.எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார்.
இனி விரிவான பலனை காணலாம்.


2020 செப்டம்பர் முதல் 2020 டிசம்பர் வரை
கடவுனிள் கருணை உங்களுக்கு கிடைக்கும். மனதில் இருந்த உளைச்சல் அடியோடு நீங்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் இருக்கும்.
உத்தியோகம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய பதவி கிடைக்கும்.தனியார்துறையில் பார்ப்பவர்களுக்கு நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு குறையும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கப் பெறுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
வியாபாரிகள் கேதுவால் நல்ல லாபத்தை பெறலாம். வேலையின்றி இருப்பவர்கள் புதிய தொழிலை தொடங்கலாம். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
கலைஞர்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை,தோல்வி இனி இருக்காது. மாணவர்கள்: கல்வியில் நல்ல வளத்தை காண லாம்.நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயம்: மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், மஞ்சள், சோளம், தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிகவருமானத்தை காண்பர். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களைபுரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல்நலம்: சிறப்பாக இருக்கும்.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர். பிள்ளைகள் நலம் மேம்படும்.


2021 ஜனவரி முதல்2021 நவம்பர் வரை
கேது இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். எதையும் வெற்றிகரமாக முடித்து காரிய அனுகூலத்தை காணலாம். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும்.ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். புதிய வீடு-மனை வாங்க யோகம் கூடி வரும்.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் தலை தூக்கலாம்.
போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அரசு ஊழியர்கள்முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிரிகள் வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது. கணினி, அச்சுத்துறை, பத்திரிகை, கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்துவிளங்கும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை பணவிரயம் ஆகலாம்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ்,பாராட்டு வரும். அரசியல்வாதிகள்,பொதுநல தொண்டர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும்.மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானத்தைக் காணலாம்.ஆடு,கோழி,பசு,கால் நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை சிற்சில விஷயங்களில் விட்டுகொடுத்து போகவும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.


2021 டிசம்பர் முதல்
குருபகவான் மன உளச்சலையும், உறவினர்வகையில் வீண்பகையையும் உருவாக்குவார்.சிலரது வீட்டில்பொருட்கள் திருட்டு ஏற்பட வாய்ப்பு உண்டு.
உத்தியோகம்- அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். சிலருக்கு வேலைமீது வெறுப்பு வரலாம். உங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். செலவை குறைத்து சிக்கனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றத்துக் -கான வழிவகையை தேட வேண்டும். நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களை பெற வேண்டியதிருக்கும். அரசியலில் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெற- லாம். மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டிய திருக்கும். விவசாயம்: உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். வழக்கு விவகாரங்கள் சீராக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும்.
பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற் காக பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.உடல்நலம் மனதில் தளர்ச்சி ஏற்படும்.
பரிகாரம்: ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும், ஏழை சிறுவர்களுக்கு படிக்கவும் உதவி செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.