மீனம்/ ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்/ காழியூர் நாராயணன்
1 min readRagu-kethu peyarchi palan – Pisces/ Kaliyur Narayanan
மீன ராசி அன்பர்களே!
நீங்கள் எந்த பிரச்சினையிலும் சிக்க மாட்டீர்கள். பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வல்லமை படைத்தவர்கள். உங்ளுடைய கண்களுக்கு அபார சக்தி உண்டு. இதுவரை ராகு 4-ம் இடமான மிதுன ராசியில் இருந்து வீண்கலகத்தையும்,அலைச்சலையும் உருவாக்கி இருப்பார்.
குடும்பத்தில் பகையையும், பிரிவையும் உருவாக்கி இருக்கலாம். இப்போது ராகு 3-ம் இடமான ரிஷபத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தர உள்ளார். குறிப்பாக காரியஅனு கூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார்.குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் கொடுப்பார்.
கேது இதுவரை 10-ம் இடமான தனுசு ராசியில் இருந்து உடல் உபாதைகளை தந்திருப்பார்.இனி அவர் 9-ம் இடமான விருச்சிகத்திற்கு போகறார்.அதுவும் சிறப்பான இடம்அல்லதான்.ஆனால் அவரால் இருந்து வந்த உடல் உபாதைகள் குணம் அடையும். அதே நேரம் கேதுவால் பொருள் இழப்பையும், காரியதோல்வியையும் காணலாம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.காரணம் அவரது பின்னோக்கிய 4,7,11-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.இதன்மூலம் தெய்வ அனுகூலம் கிடைக்கும்.
உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
மற்றகிரகங்களின் நிலை சனிபகவான் தற்போது 10-ம் இடத்தில் உள்ளார். இதனால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். செல்வாக்கு இல்லாமல் போகலாம்.
உடல் உபாதைகள் லேசாக நோக செய்யலாம். இதை கண்டு நீங்கள்
அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் அவர் 2020 டிசம்பர் 26-ந் தேதி
11-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சாகதமான இடம். பல்வேறு நன்மைகளை தருவரார்.பொன்,பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.
குருபகவான் 10-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. குரு பொருள்நஷ்டத்தையும், மனசஞ்சலத்தை யும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். மேலும் அவர் 2020 நவம்பர் 15-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 11-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மை கிடைக்கும். குருவால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும்.மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வை கள் மூலமும் நற்பலனை தருவார்.அவர் ஏப்ரல் 4-ந் தேதி முதல்
செப்டம்பர் 13-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். அவர் 2021 நவம்பர் 14-ந் தேதி முழுபெயர்ச்சி அடைந்து 12-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் பொருள் நாசம் ஏற்படும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும் அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் இல்லை.
அவரால் கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவர் உங்களுக்கு கெடுபலன்கள் அதிகம் செய்ய மாட்டார். காரணம் உங்கள் ராசியான மீனம் அவருக்கு சொந்த வீடு. சொந்த வீட்டில் இருந்து கொண்டு கெடு பலன்களை செய்ய எப்படி மனம் வரும். அதோடு குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது.
இனி விரிவான பலனை காணலாம்.
2020 செப்டம்பர் முதல் 2020 டிசம்பர் வரை
பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம். உங்கள்மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த காரியம் அனுகூலம் ஆகும். குருவால் உங்களுக்கு ஏற்பட்ட பொருள் நஷ்டம், மனதில் தளர்ச்சி,வீண் மனக்கவலை முதலியன நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகல மும் நிலவும்.தடைபட்டுவந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும் .அதுவும் நல்ல சிறப்பான வரனாக அமையும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு வாங்குவர்.அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர்.
உத்தியோகம் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு பின்தங்கிய நிலை மறையும். வேலையில் தன்னம்பிக்கை பிறக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வியாபாரம் வளர்ச்சியடையும். புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தைத் தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும்.அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும்.பகைவர்களின் சதியை முறியடிக்கும்
வல்லமையை பெறுவீர்கள்.நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்களுக்கு சககலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு.அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும். மாணவர்களுக்கு வெற்றி கிட்டும். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும் சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பைப் பெறுவர்.
விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர்.
வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பில் நல்ல வருவாய் கிடைக்கும்.
பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு குரு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உயர்வை தருவார்.பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணத்தில் சற்று கவனம் தேவை.
2021ஜனவரி முதல் 2021நவம்பர் வரை
வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
உத்தியோகம்: பதவி உயர்வு காண்பர். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம்.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். உங்கள் பணியை வேறு நபரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரிகளுக்கு பகைவர்களின் தொல்லைகள் குறையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
கலைஞர்கள் ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறலாம். நல்ல வசதியுடன் இருப்பர். மாணவர்களுக்கு கல்வி வளம் பெருகும்.ஆசிரியரிடம் நன் மதிப்பு கூடும். விவசாயிகள் பாசி-பயறு, நெல், எள், உளுந்து, மஞ்சள், கொண்டைக் கடலை பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.
பெண்கள் அனுகூலம் காண்பீர்கள்.குழந்தைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவதுநல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
2021 டிசம்பர் முதல்
பணப்புழக்கம் இருக்கும்.கணவன்-மனைவி இடையே அவ்வப்போது சிறுசிறு பூசல்கள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போக வேண்டும். இருப்பினும் ராகுசாதகமான இடத்தில் இருப்பதால் சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் பணம் கிடைக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
உத்தியோகம்- சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். வழக்கமான பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. வியாபாரம் குடும்ப பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள்.
அது சிறப்பாக முடியும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சீராக கிடைக்கும். அரசியல்வாதிகள்,சமூகநல சேககர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்கவும். விவசாயம் சீராக இருக்கும். மானாவாரி பயிர்களில் சிறப்பான வருவாய் கிடைக்கும்.புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள் சொந்தபந்தங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
உடல் நலம் சிற்சில உபாதைகள் வந்தாலும் பாதிப்புகள் ஏற்படாது.
===
கேது பார்வையால் தரும் நன்மைகள்
கேதுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வையால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகைஆபரணங்கள் வாங்கலாம். 7-ம் இடத்துப்பார்வையால் பக்தி உயர்வு மேம்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.11-ம் இடத்துப்பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.
====
பரிகாரம்:
கேதுவுக்குஅர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பத்திரகாளியம்மனுக்குஎலுமிச்சை பழ விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.