போதைப் பொருள் விவகாரம்- கண்காணிப்பு வளையத்துக்குள் முன்னணி நடிகைகள்
1 min readDrugs – Leading Actresses in the Surveillance Ring
29-/9/202
போதைப் பொருள் விவகாரத்தில் முன்னணி இந்தி நடிகர்-நடிகைகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.
சுசாந்த் சிங் மரணம்
நடிகர் சுசாந்த் சிங் மரணம் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.
சுசாந்த் சிங் மரணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் தடயவியல் நிபுணர் குழு சிபிஐயிடம் தாக்கல்
பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் தடயவியல் நிபுணர் குழு, சிபியையிடம் வழங்கியது.
சுசாந்தின் மரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் கடந்த 40 நாட்களில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ யின் வேண்டுகோளின் படி டாக்டர் சுதிர் குப்தாவின் தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர், சுசாந்தின் உடற்கூறு மற்றும் குடல் பரிசோதனை அறிக்கைகளை மறுஆய்வு செய்தனர்.
சுசாந்தின் குடலில் விஷம் காணப்பட்டதா என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
எய்ம்ஸ் மருத்துவர்கள் வழங்கிய அறிக்கையை பரிசீலித்து வருவதாகவும், தேவைப்பட்டால் அவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக வைத்து வழக்கை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தி நடிகர்-நடிகைகள்
இதற்கிடையே இந்தி நடிகர் சுசாந்த் சிங் தொடர்பான போதைப் பொருள் விவகார வழக்கில் மேலும் பல இந்தி திரை நட்சத்திரங்களை தனது கண்காணிப்பு வளையத்துக்குள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் தயாரிப்பாளர் கரண் ஜோகரிடம் பணியாற்றி வரும் சிதிஜ் பிரசாத் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து கைப்பற்ற ஆவணங்கள், வாட்ஸ் அப் சேட்டிங்குகளில் மேலும் சில இந்தி திரையுலக நட்சத்திரங்களுக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்மன் அனுப்பி விசாரிக்கும் முன்பு, தனது கண்காணிப்பு வளையத்துக்குள் அவர்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.