தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது
1 min readCorona distribution is declining in Tamil Nadu
20/10/2020
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. மராட்டிய மாநிலத்திற்கு அடுத்த நிலையில் இருந்தது. தினமும் 6 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது கொரோனா குறைந்து வருகிறது.
இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்ததில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிய்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 94 ஆயிரத்து 30 ஆக உள்ளது.
தற்போது தமிழகத்தில் 36 ஆயிரத்து 734 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 4,403 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 46 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது.
50 பேர் சாவு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு 10 ஆயிரத்து 741 பேர் இறந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக…
தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-
சென்னை – 857
அரியலூர் – 15
செங்கல்பட்டு – 191
கோவை – 263
கடலூர் – 69
தர்மபுரி – 66
திண்டுக்கல் – 20
ஈரோடு – 72
கள்ளக்குறிச்சி – 32
காஞ்சிபுரம் – 93
கன்னியாகுமரி – 61
கரூர் – 19
கிருஷ்ணகிரி – 26
மதுரை – 61
நாகை – 33
நாமக்கல் – 95
நீலகிரி – 31
பெரம்பலூர் – 8
புதுக்கோட்டை – 23
ராமநாதபுரம் – 12
ராணிப்பேட்டை – 29
சேலம் – 169
சிவகங்கை – 22
தென்காசி – 8
தூத்துக்குடி – 37
திருநெல்வேலி – 22
தஞ்சாவூர் – 88
தேனி – 29
திருப்பத்தூர் – 47
திருவள்ளூர் – 137
திருவண்ணாமலை – 37
திருவாரூர் – 64
திருப்பூர் – 125
திருச்சி – 63
வேலூர் – 73
விழுப்புரம் – 58
விருதுநகர் – 39
மொத்தம் – 3,094