May 26, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா; 4,024 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 2,886 people in Tamil Nadu today; 4,024 discharged

24/10/2020

தமிழகத்தில் இன்று புதிதாக 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா; 4,024 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று( சனிக்கிழமை) 2, 886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 6 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 4,024 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 63 ஆயிரத்து 456 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 35 பேர் இறந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,893 ஆக அதிகரித்துள்ளது.

குறைந்தது

கடந்த ஜூன் 24ஆம் தேதி 2,865 ஆக இருந்த பாதிப்பு, சரியாக 4 மாதங்களுக்கு பின் மீண்டும் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1.95 லட்சமாக அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேர், காஞ்சிபுரத்தில் 140 பேர், திருவள்ளூரில் 165 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர அதிகபட்சமாக கோவையில் 287 பேர், திருப்பூரில் 101 பேர், சேலத்தில் 148 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

===

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.