தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
1 min readHeavy rain is possible in 8 districts of Tamil Nadu
29/10/2020
தமிழகத்தில் கனமழை தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்து உள்ளது.
கனமழை
தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தோற்றிவிட்டதாக வானிலை இலாகா அறிவத்து உள்ளது. மேலும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மயிலாப்பூர் 20 செ.மீ, சென்னை டிஜிபி அலுவலகம் 18 செ.மீ, அண்ணா பல்கலை கழகம் – 14 செ.மீ., செங்குன்றம் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.