May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,464 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,464 people in Tamil Nadu today

26/11/2020

தமிழகத்தில் இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

இந்தியா அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் குறைந்த வண்ணம்தான் இருக்கிறது. 14-வது நாளாக தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் கீழ்தான் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதரத்துறை இன்று மாலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

கடந்த் 24 மணி நேரத்தில் அதாவது இன்று மட்டும் 1,464 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 76 ஆயிரத்து174 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 11,173 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் இன்று 396 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் 40-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் குறைவாகக் கொரோனா பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து13 ஆயிரத்து 801 ஆக உள்ளது.

டிஸ்சார்ஜ்
தமிழகத்தில், இன்று மட்டும் 1,797 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 53 ஆயிரத்து 332 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 60,365 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

14 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் 14 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,669 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,837 பேர் இதுவரை கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.