May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,236 பேருக்கு கொரோனா ; 13 பேர் பலி

1 min read

Corona for 1,236 people in Tamil Nadu today; 13 people were killed

8/12/2020

தமிழகத்தில் இன்று மட்டும் 1,236 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 13 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

தமிகழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனாலும் முழுமையாக கட்டுப்படவில்லை.

தமிழக கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று ( செவ்வாய்க்கிழமை ) புதிதாக 1,236 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,92,788 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,330 பேர் சிகிச்சைக்குப்பிறது குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7,70,378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் 10,588 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

13 பேர் சாவு

இன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு 13 பேர் இறந்துள்ளனர். இவர்களில் அரசு ஆஸ்பத்தரிகளில் 6 பேரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 7 பேரும் அனுமதிக்கப்பட்டவர்க்ள.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 11,822 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.