தமிழகத்தில் இன்ற 945 பேருக்கு கொரோனா
1 min readCorona for 945 people in Tamil Nadu today
30.12.2020
தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) புதிதாக 957 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,17,077 ஆக உயர்ந்துள்ளது.
17 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 17 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,109 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1,060 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,96,353 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 8,615 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 275 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.