தமிழகத்தில் இன்று 820 பேருக்கு கொரோனா
1 min readCorona for 820 people in Tamil Nadu today
5.1.2021
தமிழகத்தில் இன்று 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:&
தமிழகத்தில் இன்று( புதன் கிழமை) 820 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் அதிகபட்சமாக 256 பேருக்கும் கோவையில் 81 பேருக்கும், செங்கல்பட்டில் 55 பேருக்கும் திருவள்ளூரில் 44 பேருக்கும், சேலத்தில் 30 பேருக்கும் கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டு உள்ளது. திருநெல்வேலியில் 9 பேருக்கும், தென்காசியில் 10 பேருக்கும், துத்துக்குடியில் 8 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,22,370 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதில் சென்னையில் 5 பேர், மதுரையில் 2 பேர் செங்கல்பட்டு, கோவை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங்குவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்-கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,177 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 971 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,02,385 ஆக உள்ளது.
தற்போது தமிழகத்தில் 7,808 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.