April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு; போலீஸ்காரருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன்

1 min read

Sathankulam double murder case; 3 day interim bail for policeman

8/1/2021
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான போலீஸ்காரருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

போலீஸ்காரர் தாமஸ்பிரான்சிஸ்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலர் ஏற்கனவே தங்களுக்கு ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்தநிலையில் போலீஸ்காரர் தாமஸ்பிரான்சிஸ் மீண்டும் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், “என்னுடைய சகோதரருக்கு திருமணம் நடக்க உள்ளது. எனவே இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார், முன்பு விசாரணைக்கு வந்தது.

இடைக்கால ஜாமீன்

முடிவில், வருகிற 10-ந்தேதி தேதி பகல் 11 மணி முதல் 12-ந்தேதி மாலை 5 மணி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.