தமிழகத்தில் இன்று கொரோனா பரவல் 551 ஆக குறைந்தது
1 min readCorona distribution in Tamil Nadu today has dropped to 551
18.1.2021
தமிழகத்தில் இன்று 551- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (திங்கட்கிழமை) 19 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. கடந்த 2 நாட்களாக 600க்கும் கீழ் வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,31,323 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 252 ஆய்வகங்கள் மூலம் இன்று மட்டும் 50,501 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 52 லட்சத்து 79 ஆயிரத்து 808 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 316 பேர் ஆண்கள். 235 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,02,477. பெண்களின் எண்ணிக்கை 3,28,812. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 758 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 13 ஆயிரத்து 326 ஆக உள்ளது.
8 பேர் சாவு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 8 பேர் இறந்தனர். இவர்களில் 3 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 5 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களில் எண்ணிக்கை 12,272 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் அதிக பட்சமாக செனனையில் 158 பேரை தாக்கியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 14 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கும், தூத்துக்-குடி மாவட்டத்தில் 6 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.