May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

என்னை முதல்-அமைச்சர் ஆக்கியது அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்தான்; மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

1 min read

What made me the cheef-minister was the AIADMK. MLAs; Edappadi Palanisamy’s reply to MK Stalin

20.1.2021

என்னை முதல் அமைச்சராக்கியது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான் என்றும் சசிகலா விடுதலையாகும் தேதியான ஜனவரி 27ந் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சிதான் இருக்கும் என்றும் மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தலையட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்கிறார். இன்று (புதன்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது நான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று கூறி வருகிறார். நான் மக்களால் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவன். என்னை முதல் அமைச்சராக ஆக்கியது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தான். அவர்கள்தான் என்னை தேர்வு செய்தார்கள். மக்களுக்கு நிறைவான ஆட்சியை நாங்கள் தருகிறோம்.

எனது ஆட்சி சில நாட்களில் முடிவுக்கு வரப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஜனவரி 27ந் தேதிக்குப் பிறகும் எனது தலைமையிலான ஆட்சி நீடிக்கும். சசிகலா விடுதலையாகி வந்தாலும் நான்தான் முதல்வராக நீடிப்பேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.